என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை- டி.டி.வி.தினகரன்
- மொழி கொள்கையில் தி.மு.க. அரசு அரசியல் செய்யக்கூடாது.
- நிதி தர மாட்டோம் என மத்திய அமைச்சர் கூறவில்லை.
சென்னை அடையாறில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மத்திய அரசு இந்தியை எல்லாம் திணிக்கவில்லை.
* மொழி கொள்கையில் தி.மு.க. அரசு அரசியல் செய்யக்கூடாது.
* இந்தியை மத்திய அரசு திணிப்பதாக தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் பொய் பிரசாரம் செய்கின்றனர்.
* நிதி தர மாட்டோம் என மத்திய அமைச்சர் கூறவில்லை.
* புதிய கல்விக்கொள்கை மூலம் 3-வதாக விருப்பப்படும் ஒரு மொழியை கற்கலாம் என மத்திய அரசு கூறுகிறது.
* எங்களுக்கு இருமொழி கொள்கையே போதும் என மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டியது தானே.
* கால சூழல் மாறுதலுக்கு ஏற்ப 3-வது ஒரு மொழியை கற்க சொல்கின்றனர் என்று கூறினார்.
Next Story






