என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஹரித்துவார் செல்வதாக கூறிவிட்டு அமித் ஷாவை சந்தித்த செங்கோட்டையன்?
    X

    ஹரித்துவார் செல்வதாக கூறிவிட்டு அமித் ஷாவை சந்தித்த செங்கோட்டையன்?

    • டெல்லியில் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • அ.தி.மு.க. வளர வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம்.

    அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

    இந்த நிலையில், இன்று காலை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி செல்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

    அவரிடம், டெல்லியில் பா.ஜ.க. தலைவர்களை சந்திக்க செல்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு செங்கோட்டையன்," ஹரித்துவார் சென்று ராமரை தரிசனம் செய்தால் சற்று மன ஆறுதலாக இருக்கும் என்பதால் செல்கிறேன். டெல்லி சென்று அங்கிருந்து ஹரித்துவார் செல்கிறேன். பா.ஜ.க. தலைவர்களை சந்திக்க செல்லவில்லை. நாளை முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிட போவதில்லை.

    அ.தி.மு.க.வில் பிரிந்திருக்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. அனைவரும் ஒன்றாக வேண்டும். அ.தி.மு.க. வளர வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம்" என்றார்.

    இந்நிலையில், மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்வதாக புறப்பட்டுச் சென்ற செங்கோட்டையன் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×