என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மூக்குத்தி, பட்டன்கள் மூலம் பிட் கொண்டு செல்ல முடியுமா? - நீட் தேர்வு கெடுபிடிகள் குறித்து சீமான் கேள்வி
- தமிழ்நாட்டில் மட்டும் நீட் தேர்வில் இவ்வளவு கெடுபிடிகள் ஏன்?
- அனிதா இறந்தவுடன் நீட்டை ஒழிப்போம், ரகசியம் வைத்துள்ளோம் என சொன்ன தி.மு.க. இதுவரை என்ன செய்துள்ளது?
சென்னை:
நாடு முழுவதும் நேற்று மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் மாணவர்கள் கடும் சோதனைக்குட்பட்டே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதனால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நீட் தேர்வு நடைமுறைகள் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
* நீட் தேர்வு முறை குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.
* பயிற்சி மையங்கள் சம்பாதிக்கவே நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
* நீட் தேர்வை அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் நடத்தி கொண்டிருக்கிறது. நமது நாட்டினரால் நடத்த முடியாதா?
* ஒரு மாணவனை தேர்வு செய்யும் தேர்வு நடத்த முடியாதவர்களால் நாட்டிற்கான தலைவரை எப்படி தேர்ந்தெடுக்க முடியும்?
* நீட் தேர்வு எழுதுவதாலேயே தரமான மருத்துவர்கள் வருவார்கள் என்பது பைத்தியக்காரகத்தனமாது.
* நீட் தேர்வால் கிராம மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேறவில்லை.
* வசதி படைத்த மாணவன் மருத்துவன் ஆகலாம், கிராமப்புறங்களில் கஷ்டப்படும் ஒரு மாணவனுக்கு மருத்துவ கனவு வரக்கூடாதா?
* தமிழ்நாட்டில் மட்டும் நீட் தேர்வில் இவ்வளவு கெடுபிடிகள் ஏன்?
* வட இந்தியாவில் புத்தகத்தை திறந்து வைத்து நீட் தேர்வு எழுதுகின்றனர், மேற்பார்வையாளர் காவலுக்கு நிற்கின்றனர்.
* மூக்குத்தி மூலம் மாணவி எப்படி பிட் கொண்டு செல்ல முடியும்? பட்டன்கள் மூலம் மாணவர்கள் பிட் கொண்டு செல்ல முடியுமா?
* உள்ளாடைகளை கழட்டச் சொல்வதால் ஜவுளிக்கடையில் நீட் தேர்வுக்கு ஏற்ற ஆடை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சோதனை என்ற பெயரில் வதை செய்தால் மாணவர்கள் எப்படி தேர்வெழுதும் மனநிலைக்கு வருவர்.
* அனிதா இறந்தவுடன் நீட்டை ஒழிப்போம், ரகசியம் வைத்துள்ளோம் என சொன்ன தி.மு.க. இதுவரை என்ன செய்துள்ளது? என கேள்வி எழுப்பினார்.






