என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அரசின் கண்கள் மற்றும் கரங்களாக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும்..!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- நாட்டிற்கே முன்னோடியான திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.
- திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் திட்டங்கள் நீண்டு கொண்டே செல்லும்.
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS ) அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜாக்டோ ஜியோ சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள அரசு ஊழியர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"ஆசிரியர்கள் செய்வது பணி அல்ல..தொண்டு" என்றார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் பேசியதாவது:-
அரசு ஊழியர்களின் வியர்வை துளிகள் மதிக்கப்பட வேண்டும். கண்ணீர் துளிகள் துடைக்கப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் சேர்த்த தான் அரசாங்கம், நாணயத்தின் 2 பக்கள் நாம்.
பொதுமக்களின் நலனுக்கான திட்டங்களை கொண்டு சேர்ப்பவர்கள் தான் அரசு ஊழியர்கள். ஆசிரியர்கள் செய்வது பணி அல்ல; தொண்டு.
பணிக்காலத்தில் இறக்கும் அரசு ஊழியர் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்டது.
நாட்டிற்கே முன்னோடியான திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் திட்டங்கள் நீண்டு கொண்டே செல்லும்.
அரசின் கண்கள் மற்றும் கரங்களாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் செயல்படுகிறார்கள். ஆசிரியர்களின் உழைப்பால்தான் தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குகிறது.
தமிழ்நாட்டிற்கான நிதியை மத்திய அரசு குறைத்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாட்டிற்கு திட்டமிட்டு நிதி நெருக்கடியை மத்திய அரசு ஏற்படுத்துகிறது.
பழைய ஓய்வூதிய திட்டத்ததை முந்தைய அதிமுக ஆட்சி பறித்தது. அரசு ஊழியர்களின் கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைத்தது கடந்த அதிமுக ஆட்சி.
எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் அரசு ஊழியர்களை கொச்சைப்படுத்தி பேசினார். திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரை செய்வதை சொல்லி மக்களிடம் பாராட்டு வாங்குவோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






