என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ராமதாசும், அன்புமணியும் மனம் விட்டு பேசினால் சுமூக முடிவு எட்டப்படும் - ஜி.கே.மணி
    X

    ராமதாசும், அன்புமணியும் மனம் விட்டு பேசினால் சுமூக முடிவு எட்டப்படும் - ஜி.கே.மணி

    • ராமதாஸ் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.
    • பா.ம.க.வில் தற்போது ஏற்பட்டுள்ள நிகழ்வு கவலை அளிக்கிறது.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாசை கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் சந்தித்து பேசி வருகிறார். அவர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். பல்வேறு மாவட்ட செயலாளர்கள், தலைவர்களை டாக்டர் ராமதாஸ் நீக்கி விட்டு புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அவர்கள் அப்பதவியில் தொடர்வார்கள் என அன்புமணி அறிவித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை நிருபர்களை சந்தித்த ராமதாஸ் 2026 தேர்தல் வரை நான் தான் தலைவராக இருப்பேன். அதன் பின்னர் அன்புமணி இருந்து கொள்ளட்டும் என்றார். இதற்கிடையே நேற்று முன்தினம் டாக்டர் ராமதாஸ் திடீரென அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். என உயிர் மூச்சு இருக்கும் வரை நான் தான் தலைவராக இருப்பேன் என்றார். மேலும் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். இது அன்புமணி ஆதரவாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே புதியதாக நியமிக்கப்பட்ட பா.ம.க. செயலாளர்கள், தலைவர்களுடன் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.

    இதில் கலந்து கொள்ள வந்த பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 2 நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சென்னை தனியார் மருத்துவமனையில் இருந்தேன். இன்று ஞாயிற்றுக்கிழமை டாக்டர்கள் யாரும் வர மாட்டார்கள் என டாக்டர் ராமதாஸ் அறிவுறுத்தியதால் இன்று இங்கு வந்துள்ளேன்.

    பா.ம.க.வில் தற்போது ஏற்பட்டுள்ள நிகழ்வு கவலை அளிக்கிறது. ராமதாசும், அன்புமணியும் மனம் விட்டு பேசினால் சுமூக முடிவு எட்டப்படும். சுமூக தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதே எனது ஆசை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×