என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பா.ம.க.வில் ஏற்பட்ட குழப்பத்திற்கு விரைவில் தீர்வு ஏற்படும்- ஜி.கே. மணி
- ராமதாசை அன்புமணி சந்தித்தது சந்தோஷம், மகிழ்ச்சி அளிக்கிறது.
- பா.ம.க. வலிமையான கட்சி.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்த நிலையில் சுமார் 25 நாட்களுக்கு பிறகு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணி சந்தித்தார். இது குறித்து பா.ம.க. கவுரவதலைவர் ஜி.கே.மணியிடம் கேட்டபோது கூறியதாவது:-
டாக்டர் ராமதாசை அன்புமணி சந்தித்தது சந்தோஷம், மகிழ்ச்சி அளிக்கிறது. 2 பேரும் சுமூகமாக செயல்பட முயற்சி செய்தேன். பா.ம.க. வலிமையான கட்சி. இந்த கட்சியில் ஏற்பட்ட நெருக்கடி சோதனையானது டாக்டர் ராமதாசை அன்புமணி சந்தித்தது எனக்கும் மட்டுமின்றி தொண்டர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு விரைவில் தீர்வு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






