என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அண்ணன் செங்கோட்டையன் வந்தபிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டை உறுதியாகிவிட்டது- ஆதவ் அர்ஜூனா
    X

    அண்ணன் செங்கோட்டையன் வந்தபிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டை உறுதியாகிவிட்டது- ஆதவ் அர்ஜூனா

    • இளைஞர் மாநாட்டில் இளைஞர்கள் இல்லை என்கிறார் ஆதவ் ஆர்ஜூனா.
    • நம் குறிக்கோள் என்ன? நம் லட்சியம் என்ன? வெறும் அதிகாரத்தை மட்டும் அடைவதா?

    ஈரோடு பரப்புரையில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா உரையாற்றினார்.

    அப்போது அவர் மேலும் பேசியதாவது:-

    அண்ணன் செங்கோட்டையன் வந்தபிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டை உறுதியாகிவிட்டது.

    கொள்கை தலைவர் சமூக சீர்த்திருத்தவாதி எங்களுடைய வழிகாட்டி தந்தை பெரியாரின் வழியில் அவர் பாதத்தை தொட்டு நமக்கான மிகப்பெரிய பயணத்தை ஈரோட்டில் இருந்து தலைவர் தொடங்குகிறார்.

    நம் குறிக்கோள் என்ன? நம் லட்சியம் என்ன? வெறும் அதிகாரத்தை மட்டும் அடைவதா?

    இங்கு இருக்கக்கூடிய ஈரோடு மக்கள் எந்த அளவிற்கு, ஒவ்வொரு விவசாயிகள், ஒவ்வொரு நெசவாளர்கள், ஒவ்வொரு தொழிலாளர்கள் நம்முடைய வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் மிகப்பெரிய துயரத்தில் கடக்கின்றனர்.

    இந்த ஆட்சியின் ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு இருக்கக்கூடிய அமைச்சர்கள் டாஸ்மாக் மட்டுமே நடத்திக்கொண்டிருக்கக்கூடிய நிர்வாகத்தை கொடுத்துள்ளார்கள்.

    இதை மாற்ற வேண்டும் என்றால் யாரால் மாற்ற முடியும்? தமிழக வெற்றிக் கழகத்தால், தலைவர் விஜயால் மட்டுமே மாற்ற முடியும்.

    இன்று இருக்கக்கூடிய ஒரே நம்பிக்கை த.வெ.க. தான்.

    திமுக நடத்திய இளைஞர்கள் மாநாட்டில் இளைஞர்களே இல்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    Next Story
    ×