என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் ஜனநாயகம் பாதிக்கப்படும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- முன்னெடுப்புக்கு ஆதரவு தந்த எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் தமிழக மக்கள் சார்பில் நன்றி.
- பாதிக்கப்படும் மாநிலங்களில் உள்ள எம்.பி.க்களை இணைத்து பிரதமரை சந்தித்து முறையிடப்படும்.
சென்னை:
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
* தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் ஜனநாயகம் பாதிக்கப்படும்.
* தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து முதல் மாநிலமாக 14-ந்தேதி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினோம்.
* அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆலோசித்தோம்.
* சென்னை கூட்டத்தில் 3 மாநில முதலமைச்சர்கள், கர்நாடக துணை முதல்வர், முக்கிய கட்சி தலைவர்கள் நேரடியிலும், ஒடிசா முன்னாள் முதல்வர் காணொலியிலும் பங்கேற்றனர்.
* தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* தொகுதி மறுசீரமைப்பை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் உறுதியளிக்க வேண்டும் என தீர்மானம்.
* தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து சென்னையில் பிறமாநில கட்சிகளை அழைத்து ஆலோசனை நடத்தினோம்.
* முன்னெடுப்புக்கு ஆதரவு தந்த எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் தமிழக மக்கள் சார்பில் நன்றி.
* பாதிக்கப்படும் மாநிலங்களில் உள்ள எம்.பி.க்களை இணைத்து பிரதமரை சந்தித்து முறையிடப்படும் என்றார்.






