என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    25 குழந்தைகள் உயிரிழப்பிற்கு அரசின் அலட்சியமே காரணம்- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
    X

    25 குழந்தைகள் உயிரிழப்பிற்கு அரசின் அலட்சியமே காரணம்- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

    • கிட்னி முறைகேடு விவகாரத்தில் கேட்ட கேள்விகளுக்கு முறையான பதில் கிடைக்கவில்லை.
    • விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகளை தமிழக அரசு முறையாக கொள்முதல் செய்யவில்லை.

    சென்னை :

    சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * 25 குழந்தைகளை கொன்ற இருமல் விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம்.

    * காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் செயல்பட்ட நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழப்பு.

    * காஞ்சிபுரத்தில் தயாரித்த இருமல் மருந்து இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    * தமிழக சுகாதாரத்துறை அலட்சியமாக இருந்தது என ம.பி. அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

    * தமிழக சுகாதாரத்துறையின் அலட்சியமே 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழக்க காரணம்.

    * இருமல் மருந்தால் பல குழந்தைகள் உயிரிழந்த பின்னரும் தாமதமாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    * ஸ்ரீசன் பார்மா நிறுவனம் பலமுறை தவறு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

    * ஸ்ரீசன் நிறுவனம் தொடர்ந்து தவறு செய்த நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்திருந்தால் உயிர் பலி ஏற்பட்டிருக்காது.

    * கடந்த 2 ஆண்டுகளாக குறிப்பிட்ட மருந்து நிறுவனத்தில் எந்த ஆய்வும் மேற்கொள்ளவில்லை.

    * கிட்னி முறைகேடு விவகாரத்தில் கேட்ட கேள்விகளுக்கு முறையான பதில் கிடைக்கவில்லை.

    * கிட்னி முறைகேட்டில் ஈடுபட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

    * சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றுள்ளது. யாரை காப்பாற்றுவதற்கு தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றுள்ளது.

    * தனிநபர் ஐகோர்ட் கிளையை அணுகியதால் தான் கிட்னி முறைகேடு விவகாரம் தற்போது விசாரிக்கப்படுகிறது.

    * கிட்னி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகளை தமிழக அரசு முறையாக கொள்முதல் செய்யவில்லை.

    * முறையாக நெல் கொள்முதல் செய்யாததால் 30 லட்சம் மூட்டைகள் தேங்கியுள்ளன.

    * பருவமழை தொடங்கி உள்ளதால் விவசாயிகளிடம் இருந்து போர்கால அடிப்படையில் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்றார்.

    Next Story
    ×