என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திமுகவின் சட்டத்துறை, சாதனை துறையாக விளங்கி வருகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    திமுகவின் சட்டத்துறை, சாதனை துறையாக விளங்கி வருகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழ் இனத்தை காக்கும் அரணாக, திமுக சட்டத்துறை திகழ்கிறது.
    • எமர்ஜென்சி காலத்தில் நான் உள்பட பலரும் சிறையில் அடைக்கப்பட்டோம்.

    திமுக சட்டத்துறை 3வது மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    திமுகவில் உள்ள அணிகளில் தனித்துவமான அணி சட்டத்துறை அணி. பொய்களை தகர்த்தெறிந்து 75 ஆண்டு காலம் திமுக நிமிர்ந்து நிற்கிறது. இதற்கு தொண்டர்களின் தியாகம் தான் காரணம்.

    தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழ் இனத்தை காக்கும் அரணாக, திமுக சட்டத்துறை திகழ்கிறது. இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ததும் திமுகவின் சட்டத்துறை தான்.

    எமர்ஜென்சி காலத்தில் நான் உள்பட பலரும் சிறையில் அடைக்கப்பட்டோம். எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்களுக்கான போராட்டங்களை நடத்தியபோது வழக்குகளை சந்தித்தோம்.

    திமுகவின் சட்டத்துறை, சாதனை துறையாக விளங்கி வருகிறது. ஒரே நாடு ஒரே தேர்தலை இறுதி வரை எதிர்த்து போராட வேண்டும். நீட் தேர்வு, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக திமுக சட்டத்துறை மூலம் சட்டப் போராட்டம் நடத்துகிறது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் என்று ஒரே பண்பாட்டிற்குள் நகர்த்துவதற்கு பாஜக முயற்க்கிறது. இந்த முறை பாஜகவுக்கும் நல்லது அல்ல, பிரதமர் மோடியை சர்வாதிகாரியாக மாற்ற தான் பயன்படும்.

    நான் ஆளுநரை விமர்சிக்கிறேன் என்பதற்காக அவரை மாற்றிவிட வேண்டாம். இந்திய நாட்டையும், அரசியலைப்பு சட்டத்தையும் பாதுகக்க நாம் போராடி வருகிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×