என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பெண்கள் சமூகத்தின் முதுகெலும்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    பெண்கள் சமூகத்தின் முதுகெலும்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • கட்டணமில்லா பேருந்து பயணம் மூலமாக பெண்களின் பேருந்து பயணம் அதிகரித்துள்ளது.
    • அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டதால் பெண்கள் சிரமமின்றி வேலைக்கு செல்கின்றனர்.

    நந்தம்பாக்கம்:

    சென்னை நந்தம்பாக்கத்தில் மகளிர் உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் பேசியதாவது:-

    * இந்தியாவிலேயே பெண்கள் அதிகளவில் பணிக்கு செல்லும் மாநிலம் தமிழ்நாடு.

    * ஆண்களுக்கு இணையாக பெண்கள் அதிகளவில் வெளியில் வரவேண்டும். புதிய துறைகளில் பெண்கள் இணைய வேண்டும்.

    * பல்வேறு துறைகளில் பெண்கள் உயர் பொறுப்புகளில் அமர வேண்டும்.

    * பெண்கள் தான் இந்த சமூகத்தின் முதுகெலும்பு. மக்கள் தொகையில் பாதியாக உள்ள பெண்கள் முன்னேறாவிடில் நாடு முன்னேறாது.

    * பெண்களின் பாதுகாப்பிற்காக தோழி விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    * பெண்களின் பங்களிப்பு சமமாக இருக்க வேண்டும் என தி.மு.க. அரசு பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி உள்ளது.

    * பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் கலைஞர் கருணாநிதி.

    * புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டங்கள் என பல...

    * கட்டணமில்லா பேருந்து பயணம் மூலமாக பெண்களின் பேருந்து பயணம் அதிகரித்துள்ளது.

    * அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டதால் பெண்கள் சிரமமின்றி வேலைக்கு செல்கின்றனர்.

    * பெண்கள் தலைமையேற்று நடத்தும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளது.

    * மகளிர் உரிமைத்தொகை திட்டம் இந்தியாவின் பிற மாநிலங்களும் பின்பற்றும் வகையில் செயல்படுத்தப்படும் சிறப்பான திட்டம்.

    * கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க தமிழ்நாடு அரசு சார்பில் இலவச தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

    * இதுவரை 3 லட்சம் சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டுள்ளது.

    * மார்பக புற்றுநோய் பிரத்யேக சிகிச்சைக்காக ரூ.120 கோடியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.

    * பெண்கள் பணிக்கு செல்வதற்காக குழந்தைகள், வயதானவர்களை கவனிக்க பாதுகாப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.

    Next Story
    ×