என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மத்திய அரசு நிதி வழங்காதபோதும் புதிய திட்டங்களை செயல்படுத்துகிறோம் - மு.க.ஸ்டாலின்
    X

    மத்திய அரசு நிதி வழங்காதபோதும் புதிய திட்டங்களை செயல்படுத்துகிறோம் - மு.க.ஸ்டாலின்

    • மத்திய அரசு கொடுக்கும் அல்வா தான் தற்போது பிரபலமாக உள்ளது.
    • மகளிருக்கான திட்டங்களை பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறோம்.

    நெல்லை:

    நெல்லை அரசு மருத்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    * நெல்லை வெள்ளத்தில் மிதந்த போதும் மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி தரவில்லை. கேட்டது 37,907 கோடி ரூபாய் மத்திய அரசு கொடுத்தது ரூ.276 கோடி. மாநில அரசின் நிதியில் இருந்து நிவாரண பணிகளை மேற்கொண்டாம்.

    * கூட்டணியில் இருக்கும் மாநிலங்களுக்கு மட்டும் அறிவிப்புகளையும் திட்டங்களையும் கொடுக்கின்றனர்.

    * மத்திய அரசை குறை சொல்லிவிட்டு அமைதியாக இருக்காமல் புதிய திட்டங்களை நிறைவேற்றுகிறோம்.

    * நாளுக்கு நாள் புதிய திட்டங்களை மாநில அரசு நிறைவேற்றி கொண்டிருக்கிறது.

    * மத்திய அரசு கொடுக்கும் அல்வா தான் தற்போது பிரபலமாக உள்ளது.

    * மகளிருக்கான திட்டங்களை பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறோம் என்றார்.

    பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனை மேடையில் வைத்து கொண்டே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை விமர்சித்தார்.

    Next Story
    ×