என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயத்தை பற்றியும் தெரியாது, விவசாயிகளின் கஷ்டம் பற்றியும் தெரியாது- இ.பி.எஸ்.
    X

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயத்தை பற்றியும் தெரியாது, விவசாயிகளின் கஷ்டம் பற்றியும் தெரியாது- இ.பி.எஸ்.

    • உடம்புக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ அதேபோல், விவசாயிக்கு நீர் முக்கியம்.
    • அதிமுக ஆட்சி வந்தவுடன் முறையாக மீண்டும் குடிமராமத்து திட்டம் தொடங்கப்படும்.

    தேனி கம்பம் வாரச்சந்தை அருகே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு அம்மாவால் கட்டிக்காக்கப்பட்ட அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது.

    அதிமுக ஆட்சி அமைந்த உடன் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்.

    உடம்புக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ அதேபோல், விவசாயிக்கு நீர் முக்கியம்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயத்தை பற்றியும் தெரியாது, விவசாயிகளின் கஷ்டம் பற்றியும் தெரியாது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும்போது விவசாயிகளின் கோரிக்கைகள் முழுவதுமாக நிறைவேற்றப்படும்

    அதிமுக ஆட்சி வந்தவுடன் முறையாக மீண்டும் குடிமராமத்து திட்டம் தொடங்கப்படும். விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கிய அரசு, அதிமுக தலைமையிலான அரசு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×