என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அமித்ஷாவுடன் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை சந்திப்பு
- நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஆதரவாளர்கள் தொடர்ந்து கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
- அ.தி.மு.க.வுடனான கூட்டணிக்கு பிறகான களநிலவரம் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
மதுரையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனை தொடர்ந்து அண்ணாமலையும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அண்ணாமலை ஆதரவாளர்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக கருத்து கூறி வரும் நிலையில் அமித்ஷாவுடன இச்சந்திப்பானது நடைபெற்றது.
சமூக வலைளத்தளத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஆதரவாளர்கள் தொடர்ந்து கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அ.தி.மு.க.வுடனான கூட்டணிக்கு பிறகான களநிலவரம் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
Next Story






