என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சட்டசபை வளாகத்தில் அன்புமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம்
    X

    சட்டசபை வளாகத்தில் அன்புமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம்

    • மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
    • ஜி.கே.மணியை மாற்றுவது தொடர்பாக சபாநாயகரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

    மானியக் கோரிக்கை விவாதங்களுக்காக தமிழ்நாடு சட்டசபை இன்று கூடியது. இன்று தொடங்கியுள்ள சட்டசபை கூட்டம் வருகிற 17-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

    சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

    இதனிடையே, சட்டசபை வளாகத்தில் அன்புமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    பா.ம.க. சட்டமன்றக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து ஜி.கே.மணியை நீக்கக் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜி.கே.மணியை மாற்றுவது தொடர்பாக சபாநாயகரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் அன்புமணி தரப்பு எம்.எல்.ஏ.க்களான சதாசிவம், சிவகுமார், வெங்கடேசன் ஆகியோர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×