என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

2026ல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமித் ஷா வந்துள்ளார்- அண்ணாமலை
- தமிழ்நாட்டில் மக்கள் நிம்மதியில்லாத வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
- தமிழ்நாட்டில் எங்கும், எப்போதும், யாருக்கும் பாதுகாப்பு இல்லை.
மதுரையில் அமித்ஷா தலைமையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வடகிழக்கு மாநிலங்களில் மனிதர்கள் துப்பாக்கியை விட்டுவிட்டு, அஹிம்சை முறையில் ஜனநாயகத்தின் பக்கம் வந்து கொண்டிருக்கிறார்கள். இது அமித்ஷா செய்துள்ள சாதனை.
தமிழ்நாட்டில் மக்கள் நிம்மதியில்லாத வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தை பின்னோக்கி கொண்டு செல்கிறது திமுக. முதியோர்கள் கொலை, சாதிய கொலை, கூலிப்படை கொலை என மக்கள் எங்கும் நிம்மதியாக இல்லை.
தமிழ்நாட்டில் எங்கும், எப்போதும், யாருக்கும் பாதுகாப்பு இல்லை. திமுக ஆட்சியை அகற்றவே அமித் ஷா வருகை தந்துள்ளார்.
உலகில் மிக வேகமாக வறுமையை ஒழித்த நாடு இந்தியா. அதை செய்தவர் பிரதமர் மோடி.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






