என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டில் மதவாத பிளவை உண்டாக்கும் வகையில் அமித்ஷா பேசியுள்ளார் - ஆ.ராசா
- அருவெறுப்பான, வஞ்சனம் நிறைந்த, மாநிலத்தை பிளவுப்படுத்தும் நோக்கத்துடன் அமித்ஷா பேசி உள்ளார்.
- அமித்ஷா வகிக்கும் பதவிக்கு அழகல்ல, அரசியல் சித்து விளையாட்டுகளை நிறுத்த வேண்டும்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* நாட்டின் உள்துறை அமைச்சர் என்ற தகுதியை மறந்து அப்பட்டமான பொய்களை அமித்ஷா பேசி உள்ளார்.
* தி.மு.க. அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமித்ஷா சுமத்தி உள்ளார்.
* அருவெறுப்பான, வஞ்சகம் நிறைந்த, மாநிலத்தை பிளவுப்படுத்தும் நோக்கத்துடன் அமித்ஷா பேசி உள்ளார்.
* தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டமிட்டு பேசி உள்ளார்.
* அமித்ஷாவின் பேச்சு கூட்டாட்சி தத்துவத்திற்கு நல்லது கிடையாது.
* அமைதியாக உள்ள தமிழ்நாட்டில் மதவாத பிளவை உண்டாக்கும் வகையில் அமித்ஷா பேச்சு உள்ளது.
* அமித்ஷா வகிக்கும் பதவிக்கு அழகல்ல, அரசியல் சித்து விளையாட்டுகளை நிறுத்த வேண்டும்.
* அரசியலுக்காக மிகவும் கீழ்த்தரமாக பேசி உள்ள அமித்ஷாவின் கருத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






