search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேங்கைவயல் விவகாரம்: டிஎன்ஏ மாதிரி ஒத்துப்போகவில்லை
    X

    வேங்கைவயல் விவகாரம்: டிஎன்ஏ மாதிரி ஒத்துப்போகவில்லை

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் 221 பேரிடம் விசாரணை நடத்தினர்.
    • நீதிமன்றம் அனுமதியுடன் 10 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனையும் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக்கழிவு கலந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக்கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

    இதை தொடர்ந்து போலீஸ் விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், இறுதிக் கட்டத்தை எட்டியதாக விசாரணைக் குழு சொன்னபோது, இந்த விசாரணைக் குழுவை மாற்ற வேண்டும், இந்தக் குழு எங்களையே குற்றவாளிகளாக மாற்றப் பார்க்கிறது என்று வேங்கை வயல் மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

    இதனை தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த, தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி எம்.சத்திய நாராயணன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தது. இவர், கடந்த ஆண்டு வேங்கை வயலுக்கு சென்று கள ஆய்வு செய்ததுடன், கலெக்டர் அலுவலகத்தில் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    அந்த விசாரணை அறிக்கையும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 221 பேரிடம் விசாரணை நடத்தினர். மேலும் 31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நீதிமன்றம் அனுமதியுடன் 10 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனையும் நடைபெற்றது. இந்நிலையில் 31 பேரின் டி.என்.ஏ. பரிசோதனை கடந்த பல நாட்களாக நடைபெற்று வந்தது.

    இந்த பரிசோதனை முடிவு இன்று கொடுக்கப்பட்டது. அதில் 31 பேரின் டி.என்.ஏ. ஒத்துப்போகவில்லை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால் வேங்கை வயல் விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டறிவதில் போலீசார் விசாரணையில் மிகப்பெரிய பின்னடைவு பெற்றுள்ளது.

    Next Story
    ×