என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
உதயநிதி ஸ்டாலின் இன்று முதல் 5 நாட்கள் சூறாவளி பிரசாரம்
- விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பஸ் நிலையம் அருகே இருந்து அவர் பிரசாரத்தை தொடங்குகிறார்.
- அரக்கோணம் பழைய பஸ் நிலையம் அருகே தி.மு.க. கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு-புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
அவர் இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு ராமநாதபுரம் தொகுதியில் தனது சூறாவளி பிரசாரத்தை தொடங்குகிறார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பஸ் நிலையம் அருகே இருந்து அவர் பிரசாரத்தை தொடங்குகிறார்.
மாலை 6 மணிக்கு விருதுநகர் தொகுதிக்குட்பட்ட அருப்புக்கோட்டையிலும், இரவு 7.15 மணிக்கு திருமங்கலம் பகுதியிலும் பிரசாரம் செய்கிறார். அதன் பிறகு இரவு 8.30 மணிக்கு தேனி தொகுதிக்கு சென்று உசிலம்பட்டியில் பேசுகிறார். இரவு 9.15 மணிக்கு ஆண்டிப்பட்டியில் பேச உள்ளார்.
நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு தேனி பங்களாமேடு பகுதியிலும், 11 மணிக்கு பெரியகுளம் புதிய பஸ் நிலையம் பகுதியிலும் ஓட்டு வேட்டையாடுகிறார். மாலை 5 மணிக்கு திண்டுக்கல் தொகுதிக்கு செல்கிறார். அங்கு திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியிலும், மாலை 6.15 மணிக்கு நத்தம் நகரிலும் ஓட்டு வேட்டையாடுகிறார்.
அதன்பிறகு மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்ய உள்ளார். இரவு 7 மணிக்கு மதுரை உமச்சிக்குளம் பகுதியிலும், 7.45 மணிக்கு மதுரை புதூர் பகுதியிலும் பேசுகிறார்.
அதன் பிறகு சென்னை புறப்பட்டு வருகிறார். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு காஞ்சிபுரம் தொகுதிக்கு சென்று பேசுகிறார். அதன் பிறகு ஆரணி தொகுதிக்கு செல்கிறார்.
மாலை 6 மணிக்கு செய்யாறு, 7 மணிக்கு வந்தவாசி, 8 மணிக்கு சேத்துப்பட்டு நகரங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
அதன் பிறகு திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிக்கு செல்லும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அன்று இரவு 9 மணிக்கு கீழ்பொன்னாத்தூர் பகுதியில் ஓட்டு வேட்டையாடுகிறார். மறுநாள் (26-ந்தேதி) காலை 10 மணிக்கு திருவண்ணாமலை, 10.45 மணிக்கு கலசப்பாக்கம், 11.45 மணிக்கு செங்கம், 12.30 மணிக்கு திருப்பத்தூர் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.
அன்று மாலை 5 மணிக்கு ஜோலார்பேட்டை பகுதியில் ஓட்டு வேட்டையாடுகிறார். அதன் பிறகு வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு வருகிறார். மாலை 5.45 மணிக்கு வாணியம்பாடி, 6.30 மணிக்கு ஆம்பூர், 7.30 மணிக்கு பேரணாம்பட்டு, 8.15 மணிக்கு குடியாத்தம், 9 மணிக்கு பள்ளிகொண்டா, 9.30 மணிக்கு வேலூர் பகுதிகளில் தீவிர பிரசாரத்தை மேற்கொள்கிறார்.
27-ந்தேதி (புதன்கிழமை) அரக்கோணம் தொகுதியில் ஓட்டு வேட்டையாட உள்ளார். அன்று காலை 10 மணிக்கு ஆற்காடு, 10.15 மணிக்கு ராணிப்பேட்டை, 11.30 மணிக்கு வாலாஜா, 12.30 மணிக்கு சோளிங்கர் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். மாலை 5 மணிக்கு அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட திருத்தணிக்கு வந்து ஆதரவு திரட்டுகிறார்.
மாலை 6 மணிக்கு அரக்கோணம் பழைய பஸ் நிலையம் அருகே தி.மு.க. கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார். இரவு 7.30 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதிக்கு வருகிறார். ஸ்ரீபெரும்புதூரில் மணிக்கூண்டு அருகே நடக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு திரட்ட உள்ளார்.
28-ந்தேதிக்கு பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 2-வது கட்ட பிரசாரம் தொடங்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்