search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிரதமர் பேசியதை பார்த்தேன், ரசித்தேன், சிரித்தேன்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    பிரதமர் பேசியதை பார்த்தேன், ரசித்தேன், சிரித்தேன்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • காங்கிரசை அட்டாக் பண்ணுவது போல் பேசிக் கொண்டிருக்கிறார்.
    • மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன்.

    சென்னை:

    சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கேள்வி:- பாராளுமன்றத்தில் பிரதமர் உரை நிகழ்த்தி இருக்கிறார். பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார். அது தொடர்பான நிகழ்வுகளை நீங்கள் பார்த்தீர்களா?


    பதில்:-பார்த்தேன், படித்தேன், ரசித்தேன், சிரித்தேன். ஏனென்றால் பி.ஜே.பி.தான் எதிர்க்கட்சி மாதிரியும், காங்கிரஸ் ஆளும் கட்சி மாதிரியும், அவர் தொடர்ந்து பேசுகிறார். ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அவர் எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டு ஆளுங்கட்சி போல் இருக்கக் கூடிய காங்கிரசை அட்டாக் பண்ணுவது போல் பேசிக் கொண்டிருக்கிறார். இது தான் புரியாத புதிராக இருக்கிறது.

    கேள்வி:- பிரதமர் மோடி பேசும்போது எம்.பி. தேர்தலில் 400 இடங்களை கைப்பற்றுவோம் என்று சொல்லி இருக்கிறாரே?

    பதில்:- மொத்தம் 400 தானா? 543 இடம் இருக்குது. அதையும் கைப்பற்றுவோம் என்று சொன்னால் ஆச்சரியம் இல்லை.


    கேள்வி:- நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளாரே? எப்படி பார்க்கிறீர்கள்? புதிதாக அரசியலுக்கு வந்திருக்கிறாரே?

    பதில்:- மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×