search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தல்... தொகுதி பங்கீடு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
    X

    பாராளுமன்ற தேர்தல்... தொகுதி பங்கீடு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    • விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், ம.தி.மு.க. ஆகியவை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • விடுதலை சிறுத்தைகள் கூடுதலாக ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி குறித்தான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. அதற்குள்ளாக அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், ம.தி.மு.க. ஆகியவை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

    தி.மு.க.-விடம் 3 தனித் தொகுதிகளையும் ஒரு பொதுத் தொகுதியையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்டு வலியுறுத்தியது. ஆனால் தி.மு.க. தரப்பு 2 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன் வருகிறது. கடந்த முறை ஒதுக்கப்பட்ட அளவில்தான் கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க. தொகுதிகளை ஒதுக்க விரும்புகிறது. ஆனால் விடுதலை சிறுத்தைகள் கூடுதலாக ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

    காங்கிரஸ், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு கடந்த முறையை விட குறைவான தொகுதிகளை தி.மு.க. ஒதுக்க முன் வருவதால் அக்கட்சிகள் தொகுதி பங்கீட்டு குழுவை சந்திக்க ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

    இந்நிலையில்,தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவுடன் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×