என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சில விஷயங்களை கூறினால் எடப்பாடி திகார் சிறைக்கு செல்வார்... ஓபிஎஸ்
    X

    சில விஷயங்களை கூறினால் எடப்பாடி திகார் சிறைக்கு செல்வார்... ஓபிஎஸ்

    • தி.மு.க.வுடன் நான் கூட்டு என சொல்பவர்கள் முட்டாள்கள்.
    • சிறப்பான ஆட்சி செய்யும் மோடியே பிரதமராக தொடர வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.

    கோவை:

    சூலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    இதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    ஜன.19-ந்தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதில் தான் பொதுக்குழு தீர்மானம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு முடிவுக்கு வரும்.

    கட்சியில் இருந்து என்னை நீக்கியதற்கான காரணம் என்ன? நான் என்ன குற்றம் செய்தேன் சொல்ல முடியுமா? யாருக்கு நம்பிக்கை துரோகம் செய்தேன். சொல்லமுடியுமா? யார் பதவி தந்தாலும் அவர்களுக்கு திருப்பி தந்துவிட்டு அம்மாவின் விசுவாச தொண்டனாக இப்போது வரைக்கும் இருந்து கொண்டு இருக்கிறேன்.

    தி.மு.க.வுடன் நான் கூட்டு என சொல்பவர்கள் முட்டாள்கள். சட்டமன்ற விதிகளில் எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பு மட்டும் தான் உள்ளது.

    சிறப்பான ஆட்சி செய்யும் மோடியே பிரதமராக தொடர வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.

    சில விஷயங்களை நான் கூறினால் எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்கு சென்று விடுவார். அவை அரசாங்க ரகசியம் என்பதால் அமைதியாக விட்டு விட்டேன்.

    இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

    Next Story
    ×