search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வாக்கு குறைந்தால்... மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் போட்ட ஸ்டிரிக்ட் ஆர்டர்
    X

    வாக்கு குறைந்தால்... மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் போட்ட ஸ்டிரிக்ட் ஆர்டர்

    • தனிப்பட்ட விருப்பு வெறுப்பைத் தாண்டி கட்சியோட நலன் முக்கியம். தமிழ்நாட்டோட நலன் முக்கியம்.
    • நாட்டோட எதிர்காலம் தான் முக்கியம்னு வெற்றியை நோக்கி வேலை பார்க்க வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் களத்தில் தமிழகம் இன்று காலை முதல் பரபரப்பின் உச்சத்தில் உள்ளது. முதலில் 16 பேர் கொண்ட அ.தி.மு.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன்பிறகு புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.

    அடுத்ததாக, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க. தேர்தல் அறிக்கை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

    இதனை அடுத்து, தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. அப்போது பேசிய மு.க.ஸ்டாலின்,

    * ஒரு சட்டமன்றத் தொகுதியில் வாக்கு குறைந்தாலும் மாவட்ட செயலாளர் மற்றும் பொறுப்பு அமைச்சர் தான் பொறுப்பு.

    * எந்த இடத்தில் வாக்குக் குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

    * தனிப்பட்ட விருப்பு வெறுப்பைத் தாண்டி கட்சியோட நலன் முக்கியம். தமிழ்நாட்டோட நலன் முக்கியம்.

    * நாட்டோட எதிர்காலம் தான் முக்கியம்னு வெற்றியை நோக்கி வேலை பார்க்க வேண்டும்.

    * வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அரவணைத்து அழைத்து சென்று வாக்கு சேகரிக்க வேண்டும்.

    * தேர்தலுக்குப் பிறகு ஒன்றிய- நகரம்- பகுதி- பேரூர் அளவில் வாக்கு வித்தியாசத்தின் பட்டியலை எடுக்கப் போகிறேன் எனக் கூறினார்.

    Next Story
    ×