search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சேப்பாக்கம் தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பிரசாரம் தொடக்கம்
    X

    சேப்பாக்கம் தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பிரசாரம் தொடக்கம்

    • தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறனை ஆதரித்து தனது முதல் கட்ட பிரசாரத்தை உதயநிதி மேற் கொள்கிறார்.
    • 62-வது வட்டத்தில் அமைந்து உள்ள ஐயா தெரு, பஜார் தெரு சந்திப்பில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார்.

    சென்னை:

    தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

    அதேபோல தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நாளை பிரசாரத்தை தொடங்குகிறார். சேப்பாக்கம் தொகுதியில் நாளை காலை 8.30 மணிக்கு தனது பிரசாரத்தை தொடங்குகிறார். மத்திய சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறனை ஆதரித்து தனது முதல் கட்ட பிரசாரத்தை உதயநிதி மேற் கொள்கிறார்.

    சேப்பாக்கம் பகுதி 62-வது வட்டத்தில் அமைந்து உள்ள ஐயா தெரு, பஜார் தெரு சந்திப்பில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார்.

    இது தொடர்பாக சேப்பாக்கம் பகுதி செயலாளரும் மாநகராட்சி மண்டல தலைவருமான எஸ்.மதன் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை நாளை தொடங்குவதால் சேப்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் வட்ட செயலாளர்கள், வட்ட நிர்வாகிகள், மாவட்ட அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் திரளாக பங்கேற்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் பிரசாரத்தை தொடர்ந்து மறுநாள் திருச்சுழியில் சுற்றுப் பயணம் செய்கிறார்.

    Next Story
    ×