என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தென்னிந்தியாவில் பா.ஜனதாவை இந்தியா கூட்டணி நுழைய விடவில்லை: கே.எஸ்.அழகிரி கருத்து
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தென்னிந்தியாவில் பா.ஜனதாவை இந்தியா கூட்டணி நுழைய விடவில்லை: கே.எஸ்.அழகிரி கருத்து

    • பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது.
    • பிற மாநிலங்களில் பா.ஜனதா வென்றாலும் வாக்கு சதவீதம் என்பது மிகக்குறைந்த வித்தியாசம் தான்.

    சென்னை:

    4 மாநில தேர்தல் முடிவுகள் பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

    தெலுங்கானாவில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை ஈட்டி உள்ளது. இந்தியா கூட்டணியில் முக்கியமான கட்சியாக இருப்பது காங்கிரஸ். தென்னிந்தியாவில் பா.ஜனதாவை நுழைய விடாமல் இந்தியா கூட்டணி அரணாக இருக்கிறது.

    பிற மாநிலங்களில் பா.ஜனதா வென்றாலும் வாக்கு சதவீதம் என்பது மிகக்குறைந்த வித்தியாசம் தான். அதுவும் பெரும் பண பலத்தால் சாதித்து இருக்கிறார்கள்.

    வரப்போகும் பாராளுமன்ற தேர்தலில் அந்த அளவுக்கு அவர்களால் முடியாது. தென்னிந்தியாவை போல் வட இந்தியாவிலும் பா.ஜனதாவை நுழைய விடாத நிலையை மக்கள் உருவாக்குவார்கள். பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×