search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் பிரதமர் மோடி ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் வாங்க முடியுமா? இளங்கோவன் சவால்
    X

    தமிழகத்தில் பிரதமர் மோடி ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் வாங்க முடியுமா? இளங்கோவன் சவால்

    • தமிழகத்தில் பா.ஜ.க. டெபாசிட் வாங்கினாலே பெரிய விஷயம்.
    • தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் 3 நாட்களில் வெளியிடப்படும்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார். தமிழக மக்களை ஏமாற்றி டெபாசிட்டாவது வாங்கி விடலாம் என முயற்சிக்கின்றார். இதன் காரணமாக அவர் அடிக்கடி இங்கே வந்து கொண்டிருக்கின்றார். மோடிக்கு சவால் விடுகின்றேன். முடிந்தால் அவர் தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று போட்டியிட்டு டெபாசிட் வாங்கட்டும். அப்போது அவரை பிரதமராக ஏற்றுக்கொள்கிறேன்.

    சி.ஏ.ஏ. சட்டம் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் தூக்கி எறியப்படும். மோடி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை, மோடியை பற்றி மற்றவர்கள் பேசுவதிலும் அர்த்தம் இல்லை.

    உக்ரைனில் ஆட்டோ பாம் போட தயாராக இருப்பதாகவும், மோடி பேசியதால் அவர்கள் நிறுத்திவிட்டதாக ஒரு புழுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். மோடியின் மொத்த உருவமே பித்தலாட்டம், பொய் புரட்டு தான்.

    மத்திய அரசு திட்டங்களை தான் தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருவதாக மோடி கூறுகிறார். திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை ஜெயலலிதா செய்தார். கடந்த 3 ஆண்டு காலமாக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு நிறைய செய்திருக்கின்றார். பெண்களுக்கு அவர் செய்திருக்கும் திட்டங்கள் மற்ற மாநிலங்களும் அவரை பார்த்து பின் தொடர்ந்து வருகின்றன. அவ்வளவு பெரிய சாதனைகளை மூன்றாண்டு காலத்திற்குள் முதலமைச்சர் செய்திருக்கின்றார்.

    போதை கலாச்சாரம் என்பது அரங்கசாமி அமைச்சராக இருந்த காலத்தில் இருந்து புழக்கத்தில் இருக்கிறது. இதைத்தடுக்க அ.தி.மு.க. தவறி விட்டது. தற்பொழுது நடவடிக்கை எடுக்கும் காரணத்தினால் நிறைய பேர் பிடிபட்டு கொண்டிருக்கிறார்கள்.

    இது எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால் குஜராத்தில் இருந்தும், மோடியின் நண்பரான அதானியின் துறைமுகத்தில் இருந்து தான் இந்தியா முழுவதும் போதைப்பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

    தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. கூட்டணி வெற்றி பிரகாசமாக இருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க. டெபாசிட் வாங்கினாலே பெரிய விஷயம். தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் 3 நாட்களில் வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×