search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கவர்னர் உரை உப்பு சப்பில்லாத உரை- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
    X

    கவர்னர் உரை உப்பு சப்பில்லாத உரை- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

    • அதிமுக திட்டங்களை தங்கள் திட்டங்களாக கூறுகிறார்கள், அதை கவர்னரும் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
    • கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அழகாக வடிவமைத்து திட்டமிட்டிருந்தோம்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில், சபாநாயகர் அவை மரபை கடைபிடிப்பார் என நம்புகிறோம்.

    * சட்டசபை தலைவர் நடுநிலையாக செயல்படவேண்டும், ஆனால் அவரே ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார்.

    * தேசிய கீதம் இசைப்பது தொடர்பாக கவர்னர் ஏற்கனவே சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

    * கோரிக்கை நிறைவேற்றப்படாத காரணத்தால் கவர்னர் புறக்கணித்துள்ளார்.

    * இது கவர்னருக்கும், அரசுக்கும் இடையே உள்ள பிரச்சனை.

    * அதிமுக திட்டங்களை தங்கள் திட்டங்களாக கூறுகிறார்கள், அதை கவர்னரும் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

    * கவர்னர் உரையில் எதிர்வரும் ஆண்டில் அரசு என்ன செய்ய போகிறது என்பதை சுருக்கமாக சொல்வதுதான் மரபு.

    * கவர்னர் உரை உப்பு சப்பில்லாத உரை.

    * கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அழகாக வடிவமைத்து திட்டமிட்டிருந்தோம். திமுக அரசு அவசர அவசரமாக கிளாம்பாக்க்ம பேருந்து நிலையத்தை திறந்ததால் அடிப்படை வசதிகள் இல்லை.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    Next Story
    ×