search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாமக்கல்லில் நாளை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ரோடு ஷோவில் பங்கேற்பு
    X

    நாமக்கல்லில் நாளை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் 'ரோடு ஷோ'வில் பங்கேற்பு

    • ராஜநாத் சிங் டெல்லியில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகிறார்.
    • பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.

    நாமக்கல்:

    மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி நாளை காலை 9 மணியளவில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் வகையில் "ரோடு ஷோ" செல்ல உள்ளார். இதற்காக மத்திய மந்திரி ராஜநாத் சிங் டெல்லியில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு கட்சியினர் உற்காக வரவேற்பு அளிக்கின்றனர். தொடர்ந்து அங்கிருந்து நேராக ஹெலிகாப்டரில் பரமத்தியில் உள்ள பி.ஜி.பி. கல்லூரிக்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து நாமக்கல்லுக்கு சென்று ரோடு ஷோவில் பங்கேற்கிறார்.

    இந்த ரோடு ஷோவானது நாமக்கல் -சேலம் ரோட்டில் உள்ள எம்.ஜி.எம். தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே தொடங்கி, சேலம் சாலை சந்திப்பு, நேதாஜி சிலை மற்றும் பஸ் நிலையம் வழியாக நடைபெற்று மணிக்கூண்டு பகுதிக்கு சென்றடைய உள்ளது. அப்போது தேர் நிலைய பகுதியில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பொது மக்களிடம் பேசுகிறார். இதில் பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.

    இந்த ரோடு ஷோ நிகழ்ச்சி நிறைவடைந்ததும் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் அங்கிருந்து புறப்பட்டு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். மத்திய மந்திரி நாமக்கல் வருகையையொட்டி நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    Next Story
    ×