search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேடசந்தூர் அருகே நகைக்காக மூதாட்டியை அடித்து கொன்ற தம்பதி கைது
    X

    கைது செய்யப்பட்ட தம்பதி. 

    வேடசந்தூர் அருகே நகைக்காக மூதாட்டியை அடித்து கொன்ற தம்பதி கைது

    • சம்பவ இடத்துக்கு மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் டி.எஸ்.பி. துர்காதேவி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.
    • 5 மாத கைக்குழந்தை கதறி அழுதது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கிழக்கு பூத்தாம்பட்டியை சேர்ந்த பெரியசாமி மனைவி மாரியம்மாள் (வயது70). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    அவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக பக்கது ஊரில் வசித்து வருகின்றனர். பெரியசாமி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மாரியம்மாள் மட்டும் தனியாக தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார்.

    இவரது வீட்டிற்கு அருகே வடமதுரை கொல்லப்பட்டியை சேர்ந்த ஜெகநாதன் (30), அவரது மனைவி கவுசல்யா (25) ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதிலும், 5 மாதத்திலும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    ஜெகநாதன் மற்றும் அவரது மனைவி மாரியம்மாளின் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து பார்த்து வந்தனர். மேலும் கவுசல்யா மாரிம்மாள் வீட்டிலும்வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு மாரியம்மாளுடன் சேர்ந்து கவுசல்யா மற்றும் அவரது கணவர் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தனர். பின்னர் நள்ளிரவில் அவரை இரும்பு கம்பியால் அடித்து கொன்று விட்டு அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை திருடிக் கொண்டு தங்களது வீட்டிற்கு சென்று விட்டனர்.

    அதிகாலையில் மாரியம்மாளின் வீடு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவரது மகன் ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர்.

    ராஜேந்திரன் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் டி.எஸ்.பி. துர்காதேவி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் மாரியம்மாள் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பிறகு ஜெகநாதன் மற்றும் அவரது மனைவியிடம் விசாரித்ததில் தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறி உள்ளனர்.


    அதன்பின்பு போலீசார் நடத்திய கிடுக்கிபிடி விசாரணையில் தாங்கள் கொலை செய்ததை ஒத்துக்கொண்டனர். இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    கவுசல்யாவை போலீசார் அழைத்து சென்றபோது அவரது 5 மாத கைக்குழந்தை கதறி அழுதது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

    இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், மாரியம்மாள் தனது வீட்டில் வேலை பார்த்த கவுசல்யாவை சரியாக வேலை பார்க்க வில்லை என சத்தம்போட்டு வந்துள்ளார். இது குறித்து அவர் தனது கணவரிடம் கூறவே அவரும் கோபத்தில் இருந்துள்ளார்.

    நேற்று இரவு ஜெகநாதன் எப்படியும் மாரியம்மாளை கொலை செய்து விட வேண்டும் என முடிவு செய்துள்ளார். வழக்கமாக டி.வி. பார்த்து விட்டு தூங்க சென்ற மாரியம்மாளை இரும்பு கம்பியால் தாக்கி விட்டு வீட்டில் இருந்த ரத்த கறையை துணியால் துடைத்து அதனை வெளியில் வீசி உள்ளார். கொலையை மறைக்க அவர் கீழே தவறி விழுந்து இறந்ததுபோல காட்ட வேண்டும் என முயற்சி செய்துள்ளார். ஆனால் அது முடியாமல் போகவே இரவு மாரியம்மாளின் மகன் ராஜேந்திரனுக்கு தானே போன் செய்துள்ளார். உங்கள் அம்மாவை 4 பேர் சேர்ந்து அடித்து கொலை செய்து விட்டனர். நான் அவர்களை பிடிக்க செல்வதற்குள் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர் என்று கூறி உள்ளார். ஆனால் அவரது பேச்சில் நம்பிக்கை இல்லாமல் போலீசார் விசாரித்தபோது மாட்டிக்கொண்டனர் என தெரிவித்தனர்.

    Next Story
    ×