search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தூர்வாரும் பணிகளை பார்வையிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9-ந்தேதி டெல்டா மாவட்டங்களுக்கு பயணம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தூர்வாரும் பணிகளை பார்வையிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9-ந்தேதி டெல்டா மாவட்டங்களுக்கு பயணம்

    • காவிரி டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளது.
    • நாகை, திருவாரூர் என ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்த பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 11-ந்தேதி சேலம் மாவட்டத்திற்கு செல்கிறார்.

    சென்னை:

    குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வருகிற 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தண்ணீர் திறக்க உள்ளார்.

    இதையொட்டி காவிரி டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, உள்ளிட்ட மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி தொடங்க உள்ள நிலையில் கடைமடை பகுதிகள் வரை தண்ணீர் சென்றடைய வேண்டும் என்பதற்காக தூர்வாரும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

    இந்த பணிகளை பார்வையிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 8-ந்தேதி இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு 9-ந் தேதி தஞ்சாவூர் சென்று டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கிறார். நாகை,திருவாரூர் என ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்த பிறகு 11-ந்தேதி சேலம் மாவட்டத்திற்கு செல்கிறார். அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். 12-ந் தேதி மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார்.

    Next Story
    ×