search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க.வில் இணையும் 2 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்- அம்மன் அர்ஜூனன் தகவல்
    X

    அ.தி.மு.க.வில் இணையும் 2 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்- அம்மன் அர்ஜூனன் தகவல்

    • எங்கள் மடியில் கனமில்லை. பா.ஜ.க. பிள்ளை பிடிப்பவர்கள் போல அலைகிறார்கள்.
    • நான் இங்கு ராஜாவாக இருக்கிறேன். நான் ஏன் பா.ஜ.க.வில் போய் கூஜாவாக இருக்க வேண்டும்.

    கோவை:

    கோவை மாநகர், மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அம்மன் அர்ச்சுனன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    நான் அ.தி.மு.க.வில் ராஜாவாக உள்ளேன். பா.ஜ.க.வுக்கு சென்று கூஜா தூக்க விரும்பவில்லை. நேற்று கோவை அவினாசி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் பரவியது.

    அந்த சமயத்தில் நான் ஓட்டல் அருகே உள்ள எனது நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். உடனே நான் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அவினாசி சாலை என்பது பா.ஜ.க.வினருக்கு மட்டும் சொந்தமானது அல்ல. ஒரு பொது வழிச்சாலை. மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம்.

    அ.தி.மு.க.வில் உள்ள எந்தவொரு அடிப்படை தொண்டனும் பா.ஜ.க.வில் இணைய மாட்டான். நாங்களும் சொல்வோம். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு 2 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைவார்கள்.

    அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்ததால் தான் பா.ஜ.க.வால் சட்டமன்றத் தேர்தலில் கோவையில் வெற்றி பெற முடிந்தது. நாங்கள் உயிரை கொடுத்து உழைத்து வெற்றி பெற வைத்தோம்.

    மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவை பா.ஜ.க.வில் இணைத்தது போல் இங்கும் நினைக்கிறார்கள். ஆனால் அது ஒருபோதும் நடக்காது. இது வடநாடு கிடையாது. இங்கிருந்து ஒரு தொண்டனை கூட பா.ஜ.க.வில் இணைக்க முடியாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கோவையில் வெற்றி பெற்றால் நான் அரசியல் வாழ்வை விட்டு விலகி கொள்கிறேன். எங்களால் தான் பா.ஜ.க.வினர் வெற்றி பெற்றார்கள் என்பதை மறுக்க இயலாது. கள நிலவரம் எங்களுக்கு தான் தெரியும். தமிழகத்தில் கோவை அ.தி.மு.க.வின் கோட்டை. பா.ஜ.க.வால் தனித்து வெல்ல முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×