என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
டாக்டர் கிருஷ்ணசாமியுடன் அ.தி.மு.க. குழு சந்திப்பு
- பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்” என்றார்.
- கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியை ஒதுக்குமாறு வலியுறுத்தியதாக தெரிகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சி தலைவர்களை பேச்சு வார்த்தை குழு நேரில் சந்தித்து வருகிறார்கள். புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் குழுவினர் அ.தி.மு.க. இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்தனர்.
அ.தி.மு.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவை சேர்ந்த எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, பா.பென்ஜமின், டி.ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்து கிருஷ்ணசாமிக்கு சால்வை அணிவித்தனர். சிறிது நேரம் அவருடன் ஆலோசனை நடந்தது. அப்போது டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியை ஒதுக்குமாறு வலியுறுத்தியதாக தெரிகிறது.
பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறுகையில், "அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. அ.தி.மு.க. கூட்டணி வலுவாக இருக்கிறது" என்றார். பேச்சுவார்த்தை குறித்து எஸ்.பி.வேலுமணி கூறும் போது, "தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்" என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்