search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மத்திய, மாநில அரசுகளை கண்டித்து புதுச்சேரியில், அ.தி.மு.க. 10-ந் தேதி பேரணி-கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    மத்திய, மாநில அரசுகளை கண்டித்து புதுச்சேரியில், அ.தி.மு.க. 10-ந் தேதி பேரணி-கண்டன ஆர்ப்பாட்டம்

    • புதுச்சேரி மக்களுக்கு பல்வேறு வகைகளிலும் மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டது.
    • மக்களுக்கான பல திட்டங்கள், கோரிக்கைகளை நிறைவேற்றி தராத மாநில அரசைக் கண்டித்தும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி மாநிலத்திற்கு இதுநாள் வரையிலும் மாநில அந்தஸ்து வழங்காதது, மத்திய நிதிக் குழுவில் புதுச்சேரி மாநிலத்தை இணைக்காதது, மத்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்காதது ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் அனைத்து வேலை வாய்ப்புகளிலும் புதுச்சேரிக்கென உரிய இடஒதுக்கீடு வழங்காதது.

    முதலானவற்றிற்கு காரணமான மத்திய அரசைக் கண்டிப்பது புதுச்சேரியை ஆளும் அரசு ரேஷன் கடைகளைத் திறக்காது பொது விநியோகத்திட்டத்தை அமல்படுத்தாது அரசு சார்பு நிறுவனங்களை படிப்படியாக மூடியது. உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது. தாழ்த்தப்பட்ட மக்களுக்குரிய சிறப்பு கூறு நிதியை முறையாக செயல்படுத்தாதது, மீனவர்களுக்கு உரிய உள்ஒதுக்கீடு வழங்காதது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஐ.டி. பார்க் உள்ளிட்ட புதிய தொழிற்சாலைகளைக் கொண்டு வராதது, அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படாதது, சட்டமன்றத்தில்அறிவித்த திட்டங்கள் செயல்படுத்தப்படாதது மூடப்பட்டுள்ள அரசு பஞ்சாலைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்காதது மின் துறையை தனியார்மயமாக்கும் பிரச்சனை, மின் கட்டணம் வசூலிப்பத்தில் பிரிபெய்டு மீட்டர் சிஸ்டம் கொண்டுவரப்படுவது. ஸ்மார்ட் சிட்டி பணிகளில் குளறுபடிகள் அரசின் தவறான விவசாயக் கொள்கை முடிவு உள்ளிட்ட மாநிலம் சம்பந்தமாகன பல்வேறு பிரச்சனைகளில் பாராமுகமாக இருந்து வருவதை கண்டித்தும், புதுச்சேரி மாநில மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்றித தர மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், புதுச்சேரி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் 10-ந் தேதி காலை 10 மணிக்கு கடலூர் சாலை ஏ.எப்.டி. மைதானத்தில் இருந்து பேரணியாகப் புறப்பட்டு மறைமலையடிகள் சாலை, அண்ணாசாலை, நேரு வீதி வழியாக சட்டமன்ற பேரவை அருகில் சென்றடைந்து, அங்கே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தப் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விழுப்புரம் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சண்முகம் எம்.பி. தலைமையில் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் முன்னாள் எம்.எல்.ஏ., முன்னிலையிலும் நடைபெறும்.

    இந்தப் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கட்சியினரும் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும். பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×