என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
கனமழையால் 2 நாட்களாக தவிப்பு: வெள்ளத்தில் சிக்கிய பக்தர்கள் உள்பட 70 பேர் படகுகள் மூலம் மீட்பு
- சுமார் 70 பேர் வெள்ளத்தில் சிக்கி அபய குரல் எழுப்பியதால் அங்கு பரபரப்பு நிலவியது.
- சினிமா டைரக்டர் மாரிசெல்வராஜ் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.
செய்துங்கநல்லூர்:
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த வரலாறு காணாத மழையால் ஏராளமான இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து சுமார் 30 பக்தர்கள் ஒரு பஸ்சில் ஆன்மீக சுற்றுலாவாக திருச்செந்தூர் வந்து விட்டு திரும்பும் வழியில் கருங்குளம் கோவிலுக்கு சென்றனர்.
அந்த நேரத்தில் கருங்குளம் பகுதியில் கனமழை காரணமாக திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பக்தர்கள் கருங்குளம் சத்திரம் பகுதியில் சிக்கி கொண்டனர்.
இதனால் எங்களை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என அவர்கள் சத்தம் போட்டனர். உடனே அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் உள்பட ஏராளமானோர் பக்தர்களை மீட்பதற்காக அங்கு சென்றனர்.
ஆனால் எதிர்பாராத விதமாக வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால் அனைவருமே வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். சுமார் 70 பேர் வெள்ளத்தில் சிக்கி அபய குரல் எழுப்பியதால் அங்கு பரபரப்பு நிலவியது.
தகவல் அறிந்து ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் 7 பேர் கொண்ட குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக தீயணைப்பு வாகனமும் வெள்ளத்தில் சிக்கி கொண்டது.
இதனால் அவர்களாலும் உடனடியாக வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்கள் மற்றும் பக்தர்களை மீட்க முடியவில்லை.
நேற்று மதியம் வரை வெள்ளப்பெருக்கு நீடித்த நிலையில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் அங்கேயே 2-வது நாளாக வெள்ளத்தில் தவித்தனர். தகவல் அறிந்து உவரி, திசையன்விளை, கன்னியாகுமரி பகுதியில் இருந்து மீனவர்கள் ஏராளமானோர் அங்கு படகுகளுடன் சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட னர்.
இதுபற்றி சினிமா டைரக்டர் மாரிசெல்வராஜ் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அவர் அமைச்சர் உதயநிதிக்கு தகவல் தெரிவித்தார். அவர் சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவை அங்கு அனுப்பி வைத்தார்.
பின்னர் வெள்ளத்தில் சிக்கிய பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என ஒவ்வொருவராக மீட்கும் பணி நேற்றிரவு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வெள்ளத்தில் சிக்கிய 70 பேரும், இன்று காலை பத்திரமாக மீட்கப்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்