search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மக்களவை தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது தேமுதிக
    X

    மக்களவை தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது தேமுதிக

    • தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழுவை அறிவித்துள்ளார்.
    • தேமுதிக, அதிமுக கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது

    நடைபெறவுள்ள 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை அறிவித்துள்ளார்.

    இக்குழுவில், தேமுதிக கட்சியின் துணைச்செயலாளர் எல்.கே. சுதீஷ், அவைத்தலைவர் டாக்டர்.வி. இளங்கோவன், கொள்கைப்பரப்பு செயலாளர் அழகாபுரம்.R. மோகன்ராஜ் மற்றும் துணைச்செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    தேமுதிக, அதிமுக கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், அதிமுக - தேமுதிக இடையே 2ம் கட்ட கூட்டணிப் பேச்சுவார்த்தை இன்று மாலை 5 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    Next Story
    ×