என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஜி.எஸ்.டி. பற்றி கேள்வி கேட்ட பெண் மீது பா.ஜ.கவினர் தாக்குதல்: தி.மு.க. கண்டனம்
- ஜிஎஸ்டி வரி குறித்து பெண் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
- இதனால் அவரை தகாத வார்த்தைகளில் பேசி பா.ஜ.,வினர் தாக்குதல் நடத்தினர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் பகுதியில் பாஜகவினர் பிரசாரத்திற்கு சென்றனர்.
அப்போது அங்கிருந்த ஒரு பெண், பா.ஜ.க.வினரிடம் சானிடரி நாப்கின்களுக்கு கூட ஜி.எஸ்.டி வரி வசூலிப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, பா.ஜ.க.வினர் அந்தப் பெண்ணை தகாத வார்த்தைகளில் பேசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தை அந்தப் பெண்ணே வீடியோ எடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகியது. இதற்கு தி.மு.க.வினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தி.மு.க. அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், முதலில் கோவையில் பா.ஜ.க. வன்முறை. அடுத்து திருப்பூரில் கோழைத்தனமாக தன்னந்தனியாக நின்ற ஒரு இளம்பெண் மீது கொலைவெறித் தாக்குதல். கோவையில் தோல்வி நிச்சயம் என்றதும் வன்முறை வெறியாட்டம் ஆட துவங்கியுள்ளது பா.ஜக. திருப்பூரிலும் ஒரு பெண்மணி ஜி.எஸ்.டி அநியாயங்கள் குறித்து துணிவாகவும் நேர்மையாகவும் கேட்டதற்கு பா.ஜ.க.வினர் 5 பேர் சேர்ந்து அந்த இளம் பெண்ணை தாக்கியுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இந்த அடாவடி அராஜகக் கூட்டம் அமைதியான கோவை-திருப்பூருக்கும், தமிழகத்திற்கும் தேவையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
முதலில் கோவையில் பாஜக வன்முறை. அடுத்து திருப்பூரில் கோழைத்தனமாக தன்னந்தனியாக நின்ற ஒரு இளம் பெண் மீது கொலைவெறித் தாக்குதல் !
— Dr. T R B Rajaa (@TRBRajaa) April 12, 2024
கோவையில் பாஜகவுக்கு தோல்வி நிச்சயம் என்றதும் வன்முறை வெறியாட்டம் ஆட துவங்கியுள்ளது பாஜக. திருப்பூரிலும் ஒரு பெண்மணி ஜி.எஸ்.டி அநியாயங்கள் குறித்து… https://t.co/uAvjMFmtjB pic.twitter.com/GoHQGvGqpf
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்