என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஜனநாயகம், வளர்ச்சி தொடர பிரதமராக மோடி தொடரவேண்டும்: அண்ணாமலை நடைபயண தொடக்க விழாவில் ஆர்.பி. உதயகுமார் பேச்சு
- மோடி பிரதமர் ஆனபின் வெளிநாட்டில் இந்தியர்களுக்கு மரியாதை உயர்ந்துள்ளது.
- தமிழ்நாட்டின் இரும்பு மனிதரான எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.
ராமேஸ்வரம்:
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மத்திய அரசின் கடந்த 9 ஆண்டு கால சாதனைகளை தமிழக மக்களிடம் எடுத்துக்கூறும் வகையில், பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார். 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் மேற்கொள்ளப்படும் இந்த நடைபயண தொடக்க விழா ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது.
விழாவில் அதிமுக சார்பில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, வாழும் இரும்பு மனிதராக உள்துறை மந்திரி அமித் ஷா திகழ்வதாகவும், தமிழ்நாட்டின் இரும்பு மனிதரான எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்துக்களை தெரிவிக்க வந்திருப்பதாகவும் கூறினார்.
நாட்டில் ஜனநாயகம், வளர்ச்சி தொடர பிரதமராக மோடி தொடரவேண்டும். மோடி பிரதமர் ஆனபின் வெளிநாட்டில் இந்தியர்களுக்கு மரியாதை உயர்ந்துள்ளது. மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பதற்காக 9 ஆண்டு கால சாதனைகளை கரும்பு மனிதர் அண்ணாமலை, வீடு வீடாக வீதி வீதியாக எடுத்துச் சொல்ல இருக்கிறார்.
அதேசமயம், இந்த ஜனநாயகத்திற்கும், வளர்ச்சிக்கும் ஆபத்தாக இருக்கிறது தமிழகத்தில் உள்ள மக்கள் விரோத திமுக ஆட்சி. அரசியல் அதிகாரம் என்பது கருணாநிதி குடும்பத்திற்கு மட்டும் நிரந்தர சொத்தாக வந்துவிடக்கூடாது. அதை தடுத்து நிறுத்துவதறகு, பிரதமர் மோடியின் தூதுவராக இங்கு உள்துறை மந்திரி அமித் ஷா வந்திருக்கிறார்.
இவ்வாறு ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்