search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.நகர் நகை கடையில் 2½ கிலோ நகைகளை திருடியதாக ஊழியர் மீது புகார்
    X

    தி.நகர் நகை கடையில் 2½ கிலோ நகைகளை திருடியதாக ஊழியர் மீது புகார்

    • கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் நந்தனத்தை சேர்ந்த பிரபீர் ஷேக் என்பவர் திருடியதாக புகார் கூறப்பட்டுள்ளது.
    • இருவரை மாம்பலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சென்னை:

    சென்னை தி.நகர் சவுத் உஸ்மான் சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் 2 கிலோ 46 கிராம் மதிப்பிலான தங்க நகைகளை கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் நந்தனத்தை சேர்ந்த பிரபீர் ஷேக் என்பவர் திருடியதாக புகார் கூறப்பட்டுள்ளது.

    கடந்த மார்ச் மாதம் 50 சவரன் நகைகளை கடையில் வேலை செய்த பிரபீர் ஷேக் மற்றும் அவரது நண்பர் பாலமுருகன் ஆகிய இருவர் திருடியதாக கொடுத்த புகாரில் அப்போதே பிரபீர் ஷேக், பாலமுருகன் ஆகிய இருவரை மாம்பலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த பிரபீர் ஷேக் மீது மீண்டும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மார்ச் மாதத்தில் நாங்கள் தவறாக புகார் அளித்துவிட்டதாகவும் ஆனால் தற்போது 2 கிலோ 46 கிராம் தங்க நகைகள் மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் நகை கடை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×