search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ச‌சிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்
    X
    ச‌சிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்

    காவல்துறையின் நோட்டீஸ் எங்களை கட்டுப்படுத்தாது- ச‌சிகலா வழக்கறிஞர்

    காவல்துறையின் நோட்டீஸ் எங்களை கட்டுப்படுத்தாது என்று ச‌சிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறினார்.
    ஓசூர்:

    பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்திய காரில் சசிகலா இன்று தமிழகம் புறப்பட்டார். சென்னை புறப்படும்போது பெங்களூவில் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி சசிகலா, டிடிவி தினகரன் மரியாதை செலுத்தினர்.

    அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என்று காவல்துறை அறிவுறுத்திய நிலையில் காரில் மீண்டும் அதிகமுக கொடியுடன் தமிழகம் புறப்பட்டார் சசிகலா.

    பெங்களூருவில் இருந்து புறப்பட்ட சசிகலா, தமிழக எல்லைப்பகுதி அருகே வேறு காருக்கு மாறினார். வேறு காருக்கு மாறிய நிலையில் அவர் முன்பு வந்த காரில் இருந்த அதிமுக கொடி அகற்றப்பட்டது.

    தமிழக எல்லைப்பகுதிக்குள் வந்தடைந்த சசிகலாவிற்கு அமமுக. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இந்நிலையில் அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என காவல்துறையினர் ச‌சிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனிடம் நோட்டீஸ் வழங்கினர்.

    நோட்டீசை பெற்றுக்கொண்ட அவர் காவல்துறையின் நோட்டீஸ் எங்களை கட்டுப்படுத்தாது என்று கூறினார்.
    Next Story
    ×