என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘திராவிடத்தை யாராலும் வீழ்த்த முடியாது’- கனிமொழி எம்.பி. பேட்டி
Byமாலை மலர்2 Dec 2020 6:46 AM GMT (Updated: 2 Dec 2020 6:46 AM GMT)
தமிழ்நாடு பெரியார் மண் என்றும், திராவிடத்தை யாராலும் வீழ்த்த முடியாது எனவும் கனிமொழி எம்.பி. கூறினார்.
ஈரோடு:
தி.மு.க. சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பரப்புரை பயணத்தை தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. மேற்கொண்டு வருகிறார். நேற்று ஈரோட்டில் பரப்புரை மேற்கொண்ட அவர் பெரியார் வீதியில் உள்ள பெரியார்-அண்ணா நினைவகத்தை பார்வையிட்டார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கனிமொழி எம்.பி. கூறியதாவது:-
இந்த இனத்தை சுயமரியாதையோடு மீட்க பிறந்த தலைவர் பிறந்த, அவர் வாழ்ந்த வீட்டை பார்க்க எனக்கு கிடைத்த வாய்ப்பு மிகப்பெரும் பேறாக கருதுகிறேன். தமிழகத்தில் இப்போது இருக்கக்கூடிய அ.தி.மு.க. ஆட்சி பெரியாருடைய கொள்கைகளுக்கு எல்லாம் எதிராக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. இந்த ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். தி.மு.க.வின் வெற்றி, மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராகும் வெற்றியாக மக்கள் பார்க்கிறார்கள். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அதுபற்றி கருத்து இருந்தால் கூறுகிறேன்.
இடஒதுக்கீடு கேட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டம் குறித்து ஒருவர் கூறி இருக்கும் கருத்து எனது நினைவுக்கு வருகிறது. அதாவது, பா.ம.க. போராட்டம் என்பது தேர்தலுக்கான ஒரு அரசியல் நாடகமாக பார்க்கிறேன் என்று அவர் அந்த கருத்தை கூறி உள்ளார். இது எனது கருத்தல்ல, இந்த கருத்து எனது நினைவுக்கு வருகிறது.
மு.க.அழகிரி அரசியலில் எப்படி செயல்படுவது என்பது அவருடைய தனிப்பட்ட முடிவு. இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அரசியலில் ஈடுபடலாம். எனவே அதுபற்றி கருத்து கூற வேண்டிய அவசியம் இல்லை.
சமூக நீதிக்காக பா.ஜனதா என்ன செய்தது?. தொடர்ந்து சமூக நீதியை இட ஒதுக்கீட்டை நாட்டில் அழித்துக்கொண்டு இருக்கும் நடவடிக்கையைத்தான் பா.ஜனதா எடுக்கிறது. அதனால் சமூக நீதிக்காக பா.ஜனதா எதுவும் செய்யவில்லை. திராவிட இயக்கம், தி.மு.க.தான் தொடர்ந்து சமூக நீதிக்காக குரல் கொடுத்துக்கொண்டும், போராடிக்கொண்டும் இருக்கிறது. நாம் தான் தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கிறோம். எங்களைப்பற்றி குறைகூறும் அருகதை பா.ஜனதாவினருக்கு கிடையாது.
தமிழகத்தில் திராவிடத்தை யாரும் வீழ்த்த முடியாது. சுயமரியாதை உணர்வை யாரும் வீழ்த்திவிட முடியாது. தற்போது ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க. பெரியார் இல்லத்தில் உள்ள கலைஞரின் படத்தைக்கூட மறைக்கும் அளவுக்கு சுயமரியாதையை இழந்து உள்ளது. ஆனாலும், தமிழ்நாடு பெரியார் மண். நிச்சயமாக திராவிடத்தை யாராலும் வீழ்த்த முடியாது.
இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X