என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
டாக்டர் பா சிவந்தி ஆதித்தனார்
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா- மணிமண்டபத்தில் சிலைக்கு அமைச்சர் மாலை அணிவிக்கிறார்
By
மாலை மலர்23 Sep 2020 1:59 AM GMT (Updated: 23 Sep 2020 6:36 AM GMT)

திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் அரசு சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
தூத்துக்குடி:
திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு ரூ.1 கோடியே 67 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. இதனை கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
மேலும், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த நாளான செப்டம்பர் 24-ந் தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் ரூ.1.67 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு, தமிழக முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. மேலும், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாளான செப்டம்பர் 24-ந் தேதி அன்று ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாளான செப்டம்பர் 24-ந் தேதி அன்று ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.
அதன் அடிப்படையில் திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் செப்டம்பர் 24-ந் தேதி (நாளை) அன்னாரது பிறந்தநாள் அன்று காலை 11 மணிக்கு அரசு விழாவாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற உள்ளது.
விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழுஉருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். இந்த விழாவில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் வாரிசுதாரர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த நாளான செப்டம்பர் 24-ந் தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
அதன்படி, திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில், அவரது பிறந்தநாள் விழா அரசு சார்பில் நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் ரூ.1.67 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு, தமிழக முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. மேலும், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாளான செப்டம்பர் 24-ந் தேதி அன்று ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாளான செப்டம்பர் 24-ந் தேதி அன்று ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.
அதன் அடிப்படையில் திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் செப்டம்பர் 24-ந் தேதி (நாளை) அன்னாரது பிறந்தநாள் அன்று காலை 11 மணிக்கு அரசு விழாவாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற உள்ளது.
விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழுஉருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். இந்த விழாவில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் வாரிசுதாரர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
