என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆலங்குடியில் காதல் திருமணம் செய்த ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
Byமாலை மலர்27 Feb 2020 2:13 PM GMT (Updated: 27 Feb 2020 2:13 PM GMT)
ஆலங்குடி அருகே பெற்றோர் எதிர்ப்பால் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தது.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள எஸ்.குளவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி மகன் ராமன் (வயது 21), பொறியியல் பட்டதாரி. ஆலங்குடி அருகேயுள்ள வேங்கிட குளத்தைச் சேர்ந்தவர் முத்துவேல் மகள் முத்துமாரி (19). நர்சிங் பட்டயப்படிப்பு முடித்துள்ளார்.
இவர்கள் இருவரும் பள்ளி பருவ காலத்தில் இருந்தே ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். ஆனாலும் அவர்களது காதலுக்கு இருவீட்டாரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். அவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த எதிர்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 21-ந்தேதி கோவையில் உள்ள கருங்காளியம்மன்கோவிலில் இருவரும் மாலை மாற்றி வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே தனது மகளை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தருமாறும் முத்துமாரியின் தாயார் ஏகாம்பாள் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் மனு புகார் மனு அளித்தார்.
புகாரின்பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துமாரியை தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த முத்துமாரி ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் தனது காதல் கணவருடன் நேற்று ஆஜரானார். பின்னர் தாங்கள் இருவரும் திருமணம் வயதை அடைந்து விட்டதையும், ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டதையும் கூறி, இருவரையும் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு போலீசாரிடம் கூறினர்.
போலீசார் இருவீட்டாரின் பெற்றோர்களையும் வரவழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X