search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பத்தூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசிய காட்சி.
    X
    திருப்பத்தூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசிய காட்சி.

    சேலம், திருவள்ளூர் மாவட்டத்தை 2-ஆக பிரிக்க வேண்டும்: ராமதாஸ் பேச்சு

    10 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள சேலம், திருவள்ளூர் மாவட்டத்தை 2-ஆக பிரிக்க வேண்டும் என்று திருப்பத்தூரில் நடைபெற்ற விழாவில் ராமதாஸ் பேசினார்.
    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரிக்க கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் செய்து வெற்றி கண்ட பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு திருப்பத்தூரில் பாராட்டு விழா நடந்தது.

    மாவட்ட பிரிப்புக்காக பலமுறை இங்கு வந்து முன்னாள் எம்.எல்.ஏ. ராஜாவுடன் போராடி உள்ளேன். இதற்கு பாராட்டப்பட வேண்டியவர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏனென்றால் கடந்த 10 ஆண்டுகளாக எந்த மாவட்டமும் பிரிக்கப்படவில்லை. இவர் ஆட்சியில் தான் 5 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன.

    அதில் தென்காசி மாவட்டத்திற்கு நாம் போராடவில்லை. மற்ற 4 மாவட்டங்களுக்கும் நாம் போராடி வெற்றி பெற்றுள்ளோம். திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டதற்கு முதல் காரணமாக இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. டி.கே.ராஜா தான். 4 தொகுதிகள் மாவட்டமாகும் போது வணிகம் சிறக்கும். அதனால் வணிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

    மாவட்டம் பிரித்ததால் 62 அரசு துறைகள் இங்கு வரும். அதிகாரிகள் வருவார்கள். சுலபமாக பார்க்க முடியும். இந்த மாவட்டத்தில் ஒருமுனையில் இருந்து இன்னொரு முனைக்கு 225 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும்.

    எந்த பகுதியில் இருந்து வேலூருக்கு செல்ல வேண்டுமென்றாலும் 100 கி.மீ செல்ல வேண்டும். 101 நாடுகளைவிட இந்த மாவட்டம் பெரிய மாவட்டம். இதனை எப்போதோ பிரித்து இருக்க வேண்டும்.

    பா.ம.க. நோக்கமே அனைத்து குழந்தைகளும் கட்டணம் இல்லாமல் படிக்க வேண்டும். அம்பானியின் குழந்தைகள், பேரன்களுக்கு எல்லாம் கிடைக்கும் அதே கல்வி அனைவருக்கும் தரமான, சுகமான, சுமையில்லாமல் கிடைக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் ஒரு மணி நேரமாவது விளையாட்டு இருக்க வேண்டும். மைதானம் இல்லாத பள்ளிகளுக்கு அனுமதி கொடுக்க கூடாது.

    தமிழகத்தில் 10 லட்சம், 15 லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை உள்ள மாவட்டங்களை பிரிக்க வேண்டும். அந்த வகையில் திருவள்ளூர், சேலம் மாவட்டங்கள் அடங்கும். பக்கத்து மாவட்டமான திருவண்ணாமலை மற்றும் கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களை படிப்படியாக பிரிக்க வேண்டும்.

    புதிய மாவட்டத்தின் மக்கள் இனி வரும் காலத்தில் பா.ம.க.வுக்கு ஆதரவு தாருங்கள். வாக்குச்சாவடிக்குள் நுழையும் போது யார் நமக்காக போராடுகிறார்கள் என எண்ணி பாருங்கள். அன்புமணி ராமதாஸ் சோறு போடும் விவசாயி தான் எனது கடவுள் என சொல்கிறார். கோடிக்கணக்கான இளைஞர்கள் அன்புமணியின் பின்னால் வருகிறார்கள். நல்ல வழிகாட்டுவார் என நினைக்கிறார்கள்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டும். அதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறேன். அவர்கள் விரைவில் வெளியே வருவார்கள் என உறுதியளிக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×