என் மலர்
செய்திகள்

முடிவைத்தானேந்தலில் துணை-முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம் செய்த போது எடுத்தபடம்.
மு.க.ஸ்டாலின் எந்த காலத்திலும் முதல்-அமைச்சராக வர முடியாது: ஓ.பன்னீர்செல்வம்
மு.க.ஸ்டாலினால் எந்த காலத்திலும் முதல்-அமைச்சராக வர முடியாது என்று ஒட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.
செய்துங்கநல்லூர்:
ஒட்டப்பிடாரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று 2-வது கட்டமாக பிரசாரம் செய்தார். வல்லநாடு பகுதியில் திரண்டு இருந்த தொண்டர்கள் மத்தியில் அவர் கூறியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் பொற்கால ஆட்சியை நடத்தினார். 2011-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தினார். ஆட்சியாளர்கள் உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை மக்களுக்கு கொடுக்க வேண்டும். ஜெயலலிதா நல்லாட்சி நடத்தியதால், 20 கிலோ இலவச அரிசி வழங்கினார். 16 லட்சம் குடிசைகளில் ஏழை, எளிய மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு 2023-ம் ஆண்டுக்குள் தரமான வீடுகள் கட்டும் திட்டத்தை செயல்படுத்தினார்.
ஏழை, எளிய மக்கள் 60 லட்சம் பேருக்கு தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக தமிழகம் விளங்கி கொண்டு இருக்கிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு ரூ. 3 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு உள்ளது. சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட்டு தமிழகம் அமைதிப்பூங்காவாக விளங்கி வருகிறது. இந்த தேர்தல் யாரால் வந்தது, நம்மிடம் இருந்து சென்ற துரோகியால் வந்தது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எப்படியாவது முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்ற தீராத ஆசையில் உள்ளார். அவர் முதல்-அமைச்சராக எந்த காலத்திலும் வர முடியாது. அ.தி.மு.க. இந்த தேர்தலில் காணாமல் போய்விடும் என்று கூறுகிறார். அ.தி.மு.க. மிகப்பெரிய ஆலமரம். இதில் 1 கோடி தொண்டர்கள் உள்ளனர். கருணாநிதியால் முடியாதது, உங்களால் முடியவே முடியாது. தி.மு.க. ஆட்சியில் கொலை, நிலஅபகரிப்பு நடந்தது. அந்த நிலத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீட்டு மக்களிடம் தந்தார். மின்சார தட்டுப்பாட்டை போக்க முடியாத அரசாக தி.மு.க. அரசு இருந்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு மின்மிகை மாநிலமாக மாற்றினார். தற்போது 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பிற மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க தி.மு.க.வுடன், கூட்டணி வைத்து இருப்பதாக ஒருவர் கூறுகிறார். இந்த கட்சியில் இருந்து வசதி வாய்ப்பை பெருக்கி கொண்டவர்கள் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க போகிறார்களாம். அது எந்த காலத்திலும் முடியாது. அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்து தனிக்கட்சி கண்டவர்கள், சாதிக் கட்சி கண்டவர்கள் யாரும் வாழ்ந்ததாக, உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது. இது தொண்டர்கள் இயக்கம். தி.மு.க.வில் ஒரு தொண்டன் முதல்-அமைச்சராக வர முடியுமா? முடியாது. அ.தி.மு.க. வில்தான் ஒரு தொண்டன் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக வர முடியும். ஒரு தொண்டர் பழனிசாமி முதல்-அமைச்சராக உள்ளார்.
தி.மு.க.வை எதிர்த்துதான் அ.தி.மு.க. தொடங்கப்பட்டது. நமக்கு ஒரே எதிரி தி.மு.க.தான். யார் ஆட்சியில் நல்ல மக்கள் நலத்திட்டங்கள், சமூக நலத்திட்டங்கள் கொண்டு வந்தார்கள், தொழில் வளர்ச்சி, விவசாயம் பெருகியது என்பதை பார்த்து நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும். ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். ஒட்டப்பிடாரம் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம் என்ற வரலாற்றை உருவாக்கி தாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து தெய்வச்செயல்புரம், முடிவைத்தானேந்தல் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
ஒட்டப்பிடாரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று 2-வது கட்டமாக பிரசாரம் செய்தார். வல்லநாடு பகுதியில் திரண்டு இருந்த தொண்டர்கள் மத்தியில் அவர் கூறியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் பொற்கால ஆட்சியை நடத்தினார். 2011-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தினார். ஆட்சியாளர்கள் உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை மக்களுக்கு கொடுக்க வேண்டும். ஜெயலலிதா நல்லாட்சி நடத்தியதால், 20 கிலோ இலவச அரிசி வழங்கினார். 16 லட்சம் குடிசைகளில் ஏழை, எளிய மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு 2023-ம் ஆண்டுக்குள் தரமான வீடுகள் கட்டும் திட்டத்தை செயல்படுத்தினார்.
ஏழை, எளிய மக்கள் 60 லட்சம் பேருக்கு தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக தமிழகம் விளங்கி கொண்டு இருக்கிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு ரூ. 3 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு உள்ளது. சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட்டு தமிழகம் அமைதிப்பூங்காவாக விளங்கி வருகிறது. இந்த தேர்தல் யாரால் வந்தது, நம்மிடம் இருந்து சென்ற துரோகியால் வந்தது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எப்படியாவது முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்ற தீராத ஆசையில் உள்ளார். அவர் முதல்-அமைச்சராக எந்த காலத்திலும் வர முடியாது. அ.தி.மு.க. இந்த தேர்தலில் காணாமல் போய்விடும் என்று கூறுகிறார். அ.தி.மு.க. மிகப்பெரிய ஆலமரம். இதில் 1 கோடி தொண்டர்கள் உள்ளனர். கருணாநிதியால் முடியாதது, உங்களால் முடியவே முடியாது. தி.மு.க. ஆட்சியில் கொலை, நிலஅபகரிப்பு நடந்தது. அந்த நிலத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீட்டு மக்களிடம் தந்தார். மின்சார தட்டுப்பாட்டை போக்க முடியாத அரசாக தி.மு.க. அரசு இருந்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு மின்மிகை மாநிலமாக மாற்றினார். தற்போது 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பிற மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க தி.மு.க.வுடன், கூட்டணி வைத்து இருப்பதாக ஒருவர் கூறுகிறார். இந்த கட்சியில் இருந்து வசதி வாய்ப்பை பெருக்கி கொண்டவர்கள் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க போகிறார்களாம். அது எந்த காலத்திலும் முடியாது. அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்து தனிக்கட்சி கண்டவர்கள், சாதிக் கட்சி கண்டவர்கள் யாரும் வாழ்ந்ததாக, உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது. இது தொண்டர்கள் இயக்கம். தி.மு.க.வில் ஒரு தொண்டன் முதல்-அமைச்சராக வர முடியுமா? முடியாது. அ.தி.மு.க. வில்தான் ஒரு தொண்டன் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக வர முடியும். ஒரு தொண்டர் பழனிசாமி முதல்-அமைச்சராக உள்ளார்.
தி.மு.க.வை எதிர்த்துதான் அ.தி.மு.க. தொடங்கப்பட்டது. நமக்கு ஒரே எதிரி தி.மு.க.தான். யார் ஆட்சியில் நல்ல மக்கள் நலத்திட்டங்கள், சமூக நலத்திட்டங்கள் கொண்டு வந்தார்கள், தொழில் வளர்ச்சி, விவசாயம் பெருகியது என்பதை பார்த்து நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும். ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். ஒட்டப்பிடாரம் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம் என்ற வரலாற்றை உருவாக்கி தாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து தெய்வச்செயல்புரம், முடிவைத்தானேந்தல் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
Next Story






