என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பா.ஜனதா தவறுகளை விளக்கி காங்கிரஸ் பிரசார கையேடு நாளை வெளியிடப்படுகிறது
Byமாலை மலர்28 March 2019 9:25 AM GMT (Updated: 28 March 2019 9:25 AM GMT)
பாராளுமன்ற தேர்தலையொட்டி பாரதிய ஜனதா தவறுகளை விளக்கி தமிழக காங்கிரஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரசார கையேடு நாளை வெளியிடப்படுகிறது. #LSPolls #Congress #BJP
சென்னை:
தமிழக காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.
அலங்கோல ஆட்சிகளை அகற்றுவோம் என்ற தலைப்பில் 80 பக்கங்கள் கொண்டதாக இந்த புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
15 தலைப்புகளின் கீழ் பா.ஜனதா, அ.தி.மு.க. அரசின் தவறுகள் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக ரபேல் போர் விமான விவகாரம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவற்றில் நடந்த முறைகேடுகள் மக்கள் அனுபவித்த கஷ்டங்கள் ஆகியவற்றை விளக்கமாக தெரிவித்துள்ளனர்.
மேலும் சி.பி.ஐ., ரிசர்வ் வங்கி உள்ளிட்ட துறைகளில் மத்திய அரசின் தலையீடு, மோடியின் தேவையற்ற செலவுகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளனர்.
அதே போல் மாநில அ.தி.மு.க. அரசில் நடந்துள்ள முறைகேடுகள், நிர்வாக சீர்கேடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை விளக்கி உள்ளனர்.
இந்த பிரசார கையேட்டை நாளை (வெள்ளி) தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிடுகிறார். காங்கிரஸ் விளம்பர குழு தலைவர் தங்கபாலு, சஞ்சய்தத், தி.மு.க. சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், கம்யூனிஸ்டு சார்பில் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
அதைத் தொடர்ந்து 40 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், பேச்சாளர்களுக்கு அனுப்பப்படுகிறது.
தேர்தல் பிரசாரத்தில் மத்திய - மாநில அரசுகளை தோலுரிக்க இந்த கையேடு உதவும் என்று காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா தெரிவித்தார். #LSPolls #Congress #BJP
தமிழக காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.
அலங்கோல ஆட்சிகளை அகற்றுவோம் என்ற தலைப்பில் 80 பக்கங்கள் கொண்டதாக இந்த புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
15 தலைப்புகளின் கீழ் பா.ஜனதா, அ.தி.மு.க. அரசின் தவறுகள் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக ரபேல் போர் விமான விவகாரம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவற்றில் நடந்த முறைகேடுகள் மக்கள் அனுபவித்த கஷ்டங்கள் ஆகியவற்றை விளக்கமாக தெரிவித்துள்ளனர்.
மேலும் சி.பி.ஐ., ரிசர்வ் வங்கி உள்ளிட்ட துறைகளில் மத்திய அரசின் தலையீடு, மோடியின் தேவையற்ற செலவுகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளனர்.
அதே போல் மாநில அ.தி.மு.க. அரசில் நடந்துள்ள முறைகேடுகள், நிர்வாக சீர்கேடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை விளக்கி உள்ளனர்.
இந்த பிரசார கையேட்டை நாளை (வெள்ளி) தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிடுகிறார். காங்கிரஸ் விளம்பர குழு தலைவர் தங்கபாலு, சஞ்சய்தத், தி.மு.க. சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், கம்யூனிஸ்டு சார்பில் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
அதைத் தொடர்ந்து 40 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், பேச்சாளர்களுக்கு அனுப்பப்படுகிறது.
தேர்தல் பிரசாரத்தில் மத்திய - மாநில அரசுகளை தோலுரிக்க இந்த கையேடு உதவும் என்று காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா தெரிவித்தார். #LSPolls #Congress #BJP
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X