என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் நல்லாட்சி அமைந்திட ஒற்றுமையாக கட்சி பணியாற்ற வேண்டும்- தினகரன் பேச்சு
    X

    தமிழகத்தில் நல்லாட்சி அமைந்திட ஒற்றுமையாக கட்சி பணியாற்ற வேண்டும்- தினகரன் பேச்சு

    தமிழகத்தில் மீண்டும் நல்லாட்சி அமைந்திட நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக கட்சி பணியாற்ற வேண்டும் என்று சிதம்பரத்தில் தினகரன் பேசினார்.

    சிதம்பரம்:

    சிதம்பரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆலோசனை கூட்டம் மற்றும் மாற்று கட்சியினர் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு பேசியதாவது:-

    இந்த கூட்டத்தில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 13 ஆயிரம் பேர், நமது கட்சியில் இணைந்துள்ளனர். அவர்களை நான் வரவேற்கிறேன். கட்சியில் இணைந்த அனைவருக்கும் உரிய பொறுப்புகள் வழங்கப்படும்.

    தமிழகத்தில் விவசாயிகள், ஏழை, எளிய மக்கள், மீனவர்கள் ஆகியோர் நலம்காக்க தமிழகத்தில் மீண்டும் நல்லாட்சி அமைந்திட நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக கட்சி பணியாற்ற வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்தியில் ஆளுகின்ற ஆட்சியாளர்கள் அலட்சியப்படுத்துகின்றனர்.

    கடலூர் மேற்கு மாவட்டத்தில் 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. சட்டசபை தேர்தல் வரும்போது, இந்த 4 தொகுதிகளுக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். அந்த வேட்பாளர்களை பெருவாரியான ஓட்டு வித்யாசத்தில் நீங்கள் வெற்றி பெற வைப்பீர்கள் என நம்புகிறேன். அதற்காக நீங்கள் பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×