என் மலர்tooltip icon

    செய்திகள்

    அட்சய திருதியை அன்று தண்ணீரை வைத்து பூஜை செய்யுங்கள்
    X

    அட்சய திருதியை அன்று தண்ணீரை வைத்து பூஜை செய்யுங்கள்

    தமிழகத்தில் குறைவில்லாத தண்ணீர் செல்வம் கிடைக்க அட்சய திருதியை அன்று தண்ணீர் வைத்து பூஜை செய்யுமாறு ‘வாட்ஸ் அப்’-ல் தகவல் பரவி வருகிறது.
    ஈரோடு:

    அட்சய திருதியை வருகிற 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஒரு குண்டு மணி அளவு நகை வாங்கினால்கூட குடும்பத்தில் மேலும் மேலும் நகையும் செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை.

    எனவே அன்றைய தினத்தில் நகை வாங்கி அதை வைத்து பூஜை செய்வதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

    ஆனால் காவிரி நீர் பிரச்சனை, தண்ணீர் பற்றாக்குறை என நிலவும் இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் குறைவில்லாத தண்ணீர் செல்வம் கிடைக்க அட்சய திருதியை அன்று தண்ணீர் வைத்து பூஜை செய்யுமாறு ‘வாட்ஸ் அப்’-ல் தகவல் பரவி வருகிறது.

    அந்த ‘வாட்ஸ்-அப்’ தகவலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    அட்சய திருதியை அன்று நாம் எதை வைத்து பூஜை செய்கிறோமோ அது பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம். தங்கம், வெள்ளி என்பது அவரவருடைய தனிப்பட்ட விருப்பம்.

    ஆனால் இன்றைய உடனடி தேவை என்பது தண்ணீர். எனவே அட்சய திருதியை அன்று ஒரு குடம் அல்லது ஒரு சொம்பு நிறைய தண்ணீரை இறைவன் முன்பு வைத்தும் குறைவில்லாத தண்ணீர் செல்வத்தை வழங்குமாறு பிரார்த்தனை செய்யுங்கள்.

    இவ்வாறு அந்த ‘வாட்ஸ்- அப்’ தகவலில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×