என் மலர்
செய்திகள்

தி.மு.க.நடத்தும் போராட்டத்தில் கொ.ம.தே.க.பங்கேற்கும்: ஈஸ்வரன்
பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டத்தில் கொங்கு நாடு மக்கள் தேசயி கட்சி பங்கேற்கும் என ஈஸ்வரம் அறிவித்துள்ளார்.
ஈரோடு:
பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க.சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
தி.மு.க.சார்பில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பல கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
இந்தநிலையில் தி.மு.க.போராட்டத்துக்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியும் ஆதரவு தெரிவித்து உள்ளது. இதுபற்றி அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு உயர்த்தியிருக்கிற பேருந்து கட்டணத்தால் ஏழை, நடுத்தர மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களை சரிவர கவனிக்காமல் நஷ்டத்தில் இயங்க பல ஆண்டுகளாக விட்டுவிட்டு பஸ் கட்டணத்தை உயர்த்தி அதன் மூலம் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட முயற்சிப்பது கண்டனத்திற்குரியது. போக்குவரத்துத்துறையின் நிர்வாக சீர்கேட்டை சரி செய்தாலே போக்குவரத்துக் கழகங்கள் லாபத்தை ஈட்ட முடியும் என்ற நிலை இருக்கும்போது கட்டண உயர்வு அவசியமற்றது.
எனவே இந்த சூழ்நிலையில் பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வருகிற 27-ஆம் தேதி தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவிருக்கின்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருந்திரளாக கலந்துகொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Tamilnews
பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க.சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
தி.மு.க.சார்பில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பல கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
இந்தநிலையில் தி.மு.க.போராட்டத்துக்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியும் ஆதரவு தெரிவித்து உள்ளது. இதுபற்றி அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு உயர்த்தியிருக்கிற பேருந்து கட்டணத்தால் ஏழை, நடுத்தர மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களை சரிவர கவனிக்காமல் நஷ்டத்தில் இயங்க பல ஆண்டுகளாக விட்டுவிட்டு பஸ் கட்டணத்தை உயர்த்தி அதன் மூலம் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட முயற்சிப்பது கண்டனத்திற்குரியது. போக்குவரத்துத்துறையின் நிர்வாக சீர்கேட்டை சரி செய்தாலே போக்குவரத்துக் கழகங்கள் லாபத்தை ஈட்ட முடியும் என்ற நிலை இருக்கும்போது கட்டண உயர்வு அவசியமற்றது.
எனவே இந்த சூழ்நிலையில் பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வருகிற 27-ஆம் தேதி தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவிருக்கின்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருந்திரளாக கலந்துகொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Tamilnews
Next Story






