என் மலர்
செய்திகள்

கடலூரில் எச்.ராஜா உருவபொம்மை எரிக்க முயற்சி: வி.சி.கட்சியினர் 100 பேர் கைது
திருமாவளவனை எச்.ராஜா தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதனை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர்:
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதனை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில முற்போக்கு மாணவர் அணி கழக செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் ஏராளமான விடுதலை சிறுத்தை கட்சியினர் இன்று மதியம் 12 மணிக்கு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை அருகே திரண்டனர்.
பின்னர் அவர்கள் திடீரென்று மறைத்து வைத்திருந்த எச்.ராஜாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.
அப்போது அங்கு நின்ற திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் உருவபொம்மையை எரிக்க விடாமல் பிடுங்கி சென்றனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் போராட்டம் நடத்த அனுமதி வழங்கவில்லை. இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்றனர்.

இதனால் விடுதலை சிறுத்தை கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட் டது. பின்னர் மறியலில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்து வேன்களில் அழைத்து சென்றனர்.
விடுதலை சிறுத்தை கட்சியினரின் மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதனை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில முற்போக்கு மாணவர் அணி கழக செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் ஏராளமான விடுதலை சிறுத்தை கட்சியினர் இன்று மதியம் 12 மணிக்கு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை அருகே திரண்டனர்.
பின்னர் அவர்கள் திடீரென்று மறைத்து வைத்திருந்த எச்.ராஜாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.
அப்போது அங்கு நின்ற திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் உருவபொம்மையை எரிக்க விடாமல் பிடுங்கி சென்றனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் போராட்டம் நடத்த அனுமதி வழங்கவில்லை. இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்றனர்.

இதனால் விடுதலை சிறுத்தை கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட் டது. பின்னர் மறியலில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்து வேன்களில் அழைத்து சென்றனர்.
விடுதலை சிறுத்தை கட்சியினரின் மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






