என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஷம் வைத்து கொல்லப்பட்ட லத்திகா, யாஷிகா
    X
    விஷம் வைத்து கொல்லப்பட்ட லத்திகா, யாஷிகா

    கள்ளக்காதலை கணவர் கண்டித்ததால் 2 குழந்தைகள் வி‌ஷம் கொடுத்து கொலை

    கள்ளக்காதல் தகராறில் தாயே 2 மகள்களை வி‌ஷம் வைத்து கொன்ற சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதுரை அடுத்த வடமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். பெயிண்டர். இவரது மனைவி அனிதா (வயது26). இவர்களது மகள்கள் லத்திகா (3), யாஷிகா (1½).

    நேற்று மாலை கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பிரகாஷ், மனைவி அனிதாவை தாக்கி விட்டு வெளியே சென்று விட்டார்.

    சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து அனிதாவின் அலறல் சத்தம் கேட்டது. சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது, குழந்தைகள் லத்திகா, யாஷிகா ஆகியோர் இறந்து கிடந்தனர். அருகில் அனிதா உயிருக்கு போராடியபடி கிடந்தார்.

    அவர் குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தானும் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து அனிதாவை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 2 குழந்தைகளின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த போது பிரகாஷ் வீட்டில் இல்லாததால் அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்துக்கு பிரகாஷ் வந்தார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.

    அனிதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த பிரகாஷ் மனைவியை கண்டித்து கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறினார். இதற்கு அனிதா மறுப்பு தெரிவித்தாக தெரிகிறது.

    நேற்று மாலை இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் அனிதாவை தாக்கி விட்டு பிரகாஷ் வெளியில் சென்று விட்டார்.

    இதனால் மனவேதனை அடைந்த அனிதா, 2 குழந்தைகளையும் வி‌ஷம் கொடுத்து கொன்று, அவரும் தற்கொலைக்கு முயன்று இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    இது தொடர்பாக பிரகாசிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அனிதாவிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    கள்ளக்காதல் தகராறில் தாயே 2 மகள்களை வி‌ஷம் வைத்து கொன்ற சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×